குடியரசு தலைவர், துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொறுத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மேலும் விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே விரைவில் விஐபி-கள் வாகனங்களில் இருந்து சிவப்பு சுழல்விளக்கு அகற்றப்படும் என தெரிகிறது.