பிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு பார்வையற்ற பெண்கள் நடனமாடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடமாநிலங்களில் பிரசித்தி பெற்ற நவராத்திரி பண்டிகை கோலாகலமாக தொடங்கியுள்ளது. பல முக்கிய நகரங்களில் ஆடல், பாடல் கொண்டாட்டங்கள், ஆலையங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. 


நவராத்திரியை முன்னிட்டு கர்பா (Garba dance) நடனம் ஆடப்படுவது வழக்கம். இந்நிலையில், பிரதமர் மோடி தனது கைப்பட எழுதிய பாடல் ஒன்றுக்கு பார்வையற்ற மாணவிகள் சிறப்பாக கார்பா நடனம் ஆடி அசத்தியுள்ளனர்.



கார்பா நடனத்தை போற்றும் விதமாக குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி அந்த பாடலை எழுதியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள பள்ளியை சேர்ந்த சுமார் 200 பார்வையற்ற மாணவிகள் இந்த நடனத்தை சிறப்பாக அரங்கேற்றியுள்ளனர். ஏற்கனவே, இந்தியாவின் மகன் என்ற பெயரில் மோடி இந்தி பாடல் ஒன்றை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...!