நான் பொம்மை துப்பாக்கிலயால் தான் அம்மாவ சுட்டேன்; ஆனா அம்மாக்கு ரத்தம் வந்துருச்சு என கதறிய குழந்தை!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தாயை பொம்மை துப்பாக்கி என்று நினைத்து நிஜ துப்பாக்கியால் சுட்டுள்ள துரதிஷ்டவசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! 


மேற்கு வங்க மாநிலம் கானாகுல் பகுதியை சேர்ந்த காகோலி ஜனா என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்துள்ளார். இதை எடுத்து கொண்டு வீட்டிற்குள் சென்ற காகோலி ஜனா, இது பொம்மை துப்பாக்கி என்று நினைத்து தனது குழந்தையிடம் கொடுத்துள்ளார். அந்த துப்பாக்கியை வைத்து விளையாடிய குழந்தை தனது தாயை பார்த்து துப்பாகியால் சுட்டுள்ளது. அந்த துப்பாக்கியில் இருந்த தோட்டா தாயின் உடம்புக்குள் பாய்ந்துள்ளது. 


இதில், பலத்த காயமடைந்த தாய் காகோலி ஜனா-வை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவமானது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடந்துள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில், தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். 


இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கை விசாரணை செய்து வரும் காவலதுறையினர் கூறுகையில், அந்த குழந்தை அதிர்ச்சியில் இருப்பதாகவும், அதனால் அவரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்வில்லை என்றும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நடப்பது வழக்கம். அமெரிக்காவில் சுலபமாக துப்பாக்கி உபயோக படுத்துகின்றனர். ஆனால், இந்தியாவில், ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!