டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நீதிமன்றத்திற்குள் நடந்துள்ளதால், சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையின் எஃப்ஐஆர் பதிவில் என்ன கூறப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது, சம்பவத்தின் போது நீதிமன்ற அறையில் நடந்தது என்ன போன்ற விவரங்கள் குறித்து டெல்லி காவல்துறை எஃப்ஐஆரில் பதிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்ட எஸ்ஐ வீர் சிங்கின் அறிக்கையின்படி, விசாரணையின் கீழ் உள்ள கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது போலிஸ் அதிகாரியின் கடமையாகும். அதாவது வழக்கு விசாரணைக்கு வரும் நாளில் சிறையில் இருக்கும் கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். கைதிகளுடன் சில போலிஸ் அதிகாரிகளும் செல்வார்கள். திகார் சிறையில் இருந்த ரவுடி ஜிதேந்திர கோகியை செப்டம்பர் 24 அன்று, ரோகிணி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டார். அவருடன் ஏஎஸ்ஐ சுனில், ஏஎஸ்ஐ ராஜேந்திரா, கான்ஸ்டபிள் ஜெகதீஷ், கான்ஸ்டபிள் வினீத், கான்ஸ்டபிள் சக்தி, கான்ஸ்டபிள் சிராக் (கமாண்டோ), கான்ஸ்டபிள் அமித் (கமாண்டோ) மற்றும் கான்ஸ்டபிள் பால்வான் ஆகியோர் சென்றனர்.


நீதிபதி முன்பு ஜிதேந்திர கோகி எப்போது கொண்டு வரப்பட்டார்?
காலை 10 மணியளவில், காவல்துறையினர் திஹார் சிறையில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் அரசு வாகனத்தில் பாதுகாப்புடன் ரோகிணி கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று, நீதிமன்ற லாக்கப்பில் அடைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் கோர்ட் எண் 304 ல் ஆஜர்படுத்திய பிறகு, அவர் மீண்டும் கோர்ட் லாக்கப்பில் அடைக்கப்பட்டனர். 


மதியம் 1:10 மணியளவில் ஏஎஸ்ஜே ககன் தீப் சிங் கோர்ட் அறைக்கு அனைத்து பாதுகாப்பு ஊழியர்களுடனும் கோர்ட் எண் 207 க்கு அழைத்து செல்லப்பட்டனர். . குற்றவாளிகளுக்கு அதிக ஆபத்து இருப்பதால், காவல் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்தனர். சிறப்புப் பாதுகாப்புப் பிரிவிற்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டது. கோர்ட் அறைக்கு ஜிதேந்திர கோகி அழைத்து செல்லும் போது அனைத்து பாதுகாப்பு பிரிவுகளை சேர்ந்த போலிஸ் அதிகாரிகளும் ஊழியர்களும் இருந்தனர்.


நீதிமன்ற அறையில் திடீரென என்ன நடந்தது?
குற்றவாளி ஜிதேந்திர கோகியை நீதிமன்ற அறையில் காவல் அதிகாரியான எஸ்ஐ வீர் சிங், ஏஎஸ்ஐ சுனில், ஏஎஸ்ஐ ராஜேந்திரன் ஆகியோர் ஆஜர்படுத்தினர். மேலும் நீதிமன்ற அறையைச் சுற்றி மற்ற காவல் அதிகாரிகளும் பாதுகாப்பில் இருந்தனர். ASJ ககன்தீப் சிங் சஹாப் நீதிமன்ற நடவடிக்கைகளில் மும்முரமாக இருந்தார். அந்த நேரத்தில் நீதிமன்றம் நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தவிர நீதிமன்ற அறையில் 5-6 வழக்கறிஞர்கள் இருந்தனர். திடீரென்று, வழக்கறிஞரின் உடையில் இருந்த இரண்டு பேர் நாற்காலியில் இருந்து எழுந்தனர். தங்களிடம் இருந்த ஆயுதங்களை எடுத்து, ஜிதேந்திர கோகியை நோக்கி சுடத்தொடங்கினர்.


எஃப்.ஐ.ஆர் பதிவில் கூறப்பட்டிருப்பது என்ன?
எஃப்.ஐ.ஆரின் படி, திடிரென துப்பாக்கி சூடு நடந்தாதால், அதற்கு பதிலடி தருவதற்குள் ஜிதேந்திர கோகியின் உடலில் பல தோட்டாக்கள் புகுந்துவிட்டது. இருவரது கைகளிலும் ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களை உயிருடன் பிடிப்பது சாத்தியமில்லை, குறிப்பாக அங்கு நீதிபதி, வழக்கறிஞர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் உடனிருந்தனர். அவர்களையும் பாதுகாப்பதும் முக்கியம்.


இந்த சம்பவத்தின் போது யார் வேண்டுமானாலும் துப்பாக்கி சூட்டில் பலியாகலாம் என்ற நிலை இருந்தது. அங்கு இருந்தவர்களின் உயிர் மற்றும் நீதிமன்ற சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்பதால், உடனடியாக போலிஸ் அதிகாரிகளான வீர் சிங், கமாண்டோ கான்ஸ்டபிள் சக்தி மற்றும் கான்ஸ்டபிள் சிராக் ஆகியோர் தங்கள் துப்பாக்கியால் இந்த இரண்டு மர்ம நபர்களை நோக்கி சுட்டனர்.


அதே நேரத்தில், சிறப்புப் பிரிவு ஊழியர்கள் மற்றும் ரோகிணி சிறப்புப் பணியாளர்களின் தலைமை காவலர் சந்தீப் தஹியா, தலைமை காவலர் குல்தீப் ஹூடா, கான்ஸ்டபிள் ரோஹித் ஆகியோரும் மர்ம நபர்களை நோக்கி சுட்டனர். அதன்பிறகு அந்த மர்ம நபர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். அதன் பிறகு குற்றவாளி ஜிதேந்திர கோகி, டெல்லியில் உள்ள பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என எஃப்.ஐ.ஆர் பதிவுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR