திருமணத்தன்று முதலிரவுக்கு ஒத்துக்க மறுத்த மனைவியை அடித்து உதைத்த கணவர் கைது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டில்லியை சேர்ந்த தர்மேந்திர சர்மா என்பவருக்கும் ஆமதாபாத்தை சேர்ந்த பிரியங்கா திவாரி என்ற பெண்ணிற்கு கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. மணப்பெண் வீட்டில் இருவருக்கும் முதலிரவிற்கான ஏற்பாடுகள் நடந்தது. 


இதியடுத்து, முதலிரவின் போது சர்மாவுடன் உடலுறவு கொள்ள திவாரி சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது இதற்கு அவர் திருமண நாள் அன்று ஏற்பட்ட உடல் அலுப்பை காரணமாக கூறியதாகவும் தெரிகிறது. இதனால் சர்மாவிற்கு பயங்கர கோபம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது ஆமதாபாத் மாமனார் வீடு என்பதால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் திருமணமான ஜோடி டில்லிக்கு சர்மாவின் வீட்டிற்கு வந்தனர். டில்லிக்கு வந்ததும் சர்மா தனது மனைவி திவாரியை முதலிரவு அன்று உடலுறவுக்கு ஒத்துழைக்காததை கூறி தனது மனைவியை அடித்து கொடுமைபடுத்தியுள்ளார். 


இது குறித்து திவாரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் போரில் போலீசார் தர்மேந்திர சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.