கணவன் மனைவி வீடியோ: இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பிரச்சனையாக பெரும் தலைவலியாக உள்ளது. என்ன செய்வது, எப்படி கட்டுப்படுத்துவது என மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியத்தை உணர்த்தும் விதமாக மத்திய, மாநில அரசு பல திட்டங்கள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனாலும் முழுமையாக மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இன்னும் சில காலங்களில் மக்கள்தொகை அடிப்படையில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதாவை அமல்படுத்த வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படி மத்திய, மாநில அரசுகள் ஒருபக்கம் "மக்கள் தொகை கட்டுப்பாடு" குறித்து சிந்தித்து வரும் வேளையில், இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் செய்தியாளர், ஒருவரிடம் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து கேள்வி கேட்ட போது, அது சம்பந்தமாக அவர் சொன்ன பதில் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுக்குறித்த காணொளி ஒன்று வைரலாகி (Viral Video) வருகிறது.


நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை விவகாரம் குறித்து, பைக் ஓட்டி வரும் நபரிடம் நிருபர் கருத்து கேட்கிறார். நிருபரின் கேள்விக்கு அந்த நபர் கூறியதை கேட்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். அந்த நிருபர் கூட நினைத்துப் பார்க்காத அளவுக்கு அந்த நபர் பதில் சொல்கிறார்.


மேலும் படிக்க: மகனுக்காக தந்தை செய்த செயல்: இணையவாசிகளை அழ வைத்த வைரல் வீடியோ


அந்த நபரிடம் "நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என பலர் கூறுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களுடைய கருத்து என்ன எனக்கேட்கிறார்.


அதற்கு பதில் அளித்த நபர், என்னாது மக்கள் தொகை குறைய வேண்டுமா? பதிலுக்கு பைக்கை ஓட்டியவர், ஒரு ஆண் மகன் 12 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்றார். இது என்னுடைய சொந்த நம்பிக்கை எனக் கூறுகிறார். அந்த சமயத்தில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த மனைவி நமக்கு எத்தனை குழந்தை என்பதையும் கூறுங்கள் என வேண்டுகோள் வைக்கிறார். அடுத்து அந்த நபர் தனக்கு ஏழு குழந்தைகள் இருப்பதாக கூறுகிறார்.


தற்போது ஏழு குழந்தைகளுக்கு அப்பா நான்.. இன்னும் ஐந்து குழந்தைகளை பெற்றுக்கொள்ளுவேன் எனக்கூறுகிறார்.


அதற்கு நிருபர், 12 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள் எனக் கேட்கிறார். 


அதற்கு அந்த நபர், ஒரு பிள்ளை என்னை கவனித்துக் கொள்ளவில்லை என்றால், மற்ற பிள்ளையிடம் செல்வேன். 12 பிள்ளைகள் இருந்தால், 12 வீடுகளும் இருக்கும். ஏதாவது ஒரு வீட்டில் எனக்கு அடைக்கலம் கிடைக்கும் எனக் கூறுகிறார்.


 



மேலும் படிக்க: வகுப்பறையில் ஆசிரியர் செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்


இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த நபர் சொல்வதை, அவரது மனைவியும் ஆதரிப்பதை வீடியோவில் நீங்கள் காணலாம்.


நிருபர், அந்த நபரின் மனைவிடம் மைக்கை நீட்டி, உங்கள் கணவர் கூறுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்கிறார். 


அதற்கு, அந்த நபரின் மனைவி, ஏற்கனவே ஏழு பிள்ளைகள் இருக்கிறது. இன்னும் ஐந்து பிள்ளைகள் பெற்றுக்கொள்ளுவோம். எனது கணவரின் விருப்பம் என்னவோ, அதுதான் எனது விருப்பம் என சிரித்துக்கொண்டே கூறுகிறார். 


இந்த வீடியோ எந்த பகுதியை சேர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக பல்வேறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ Instagram-ல் bhutni_ke_memes என்ற பக்கத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோபை பார்த்த நெட்டிசன்களும் பயங்கரமா கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க: மேடையில் ‘ஸ்மோக்கி கிஸ்’ கொடுத்த மணப்பெண்: ‘இங்கயேவா’ என கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!


வைரல் செய்திகள், வைரல் வீடியோ குறித்து செய்திகளை வாசிக்கவும், காணொளியை காணவும் எங்கள் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களை பின்தொடருவும் மற்றும் லைக் செய்யவும்.


முகநூல் : @ZEETamilNews
ட்விட்டர் : @ZeeTamilNews
டெலிக்ராம் : https://t.me/ZeeTamilNews