கொலை நடந்த அன்று தென் மேற்கு டெல்லி, சாகர்பூர் காவல் நிலையத்திற்கு போன் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் கொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டதாகவும்  தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் அப்பகுதியில் இருந்த பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அருகிலுள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப் பற்றினர்.


அந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், அந்த தெருவில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்புறம் மர்ம நபர் ஒருவர் விரட்டி வருகிறார்.


அதைக்கண்ட அப்பெண் குழந்தைகளுடன் ஓட ஆரம்பிக்கிறார். ஆனால் வெகு தூரம் ஓட முடியாமல் அப்பெண் மர்ம நபரிடம் சிக்கிக்கொண்டார்.


அப்போது தன்வசம் வைத்துள்ள கத்தியொன்றை எடுத்து அந்த குழந்தைகளுக்கு முன்பு வைத்தே அப்பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார்.


அப்பெண் நிலைகுலைந்ததும், அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிடுகிறார். பின்னர் இது குறித்து விசாரித்ததில், அப்பெண் 24 வயதுடைய ஆரத்தி என்று தெரிகிறது.


மேலும் அந்த மர்ம நபரும் அப்பெண்ணும் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. ஆனால், கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை. 


இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தப்பியோடி தலைமறைவான கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பலூனோடு பலூனாக பறந்த மணமகள், பிளான் போட்ட மாப்பிள்ளை: வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR