கூட்டு பலாத்காரத்தின் போது 3 வது மாடியிலிருந்து நிர்வாணமாக குதித்த நேபாளி பெண்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெய்ப்பூர்: நேபாளத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேபாளத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணை லக்ஷ்ஷ் சைனி (19), கமல் சாய்னி (24) ஆகியோர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது அந்த பெண் தன்னை காப்பாற்றிக்கொள்ள மூன்றாவது மாடியில் இருந்து நிர்வாணமாக கேளே குதித்துள்ளார்.


இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு பாலியல் குற்றம் சாட்டப்பட்ட லக்ஷ்ஷ் சைனி மற்றும் கமல் சாய்னி-யை வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளதாக ஷோ முஹானா பொலிஸ் நிலையம் பகுதியில் தேவேந்திர குமார் கூறியுள்ளார். 


இதை தொடர்ந்து, கூட்டு பலாத்காரத்தின் போது தன்னை காத்துக்கொள்ள மூன்றாவது மாடியில் இருந்து குதித்த பெண் ஜெய்ப்பூரியா மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இவரின் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் முழுமையான நடவடிக்கை எடுக்கபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.