டெல்லியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம், 20 வயது பெண் ஒருவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அரை நிர்வாண நிலையில் நான்காவது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய தலைநகரான ரோகினி பகுதியில் ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் இந்த சம்பவம் நடந்ததுள்ளது.


பி.டி.ஐ. அறிக்கையின் படி, அந்த பெண்ணின் நிலை தற்போது மோசமாக உள்ளதாள், பொலிசார் அவரிடம் இருந்து அறிக்கையை இன்னும் பதிவு செய்யவில்லை என கூறியுள்ளது. 


சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றுக்கு தன் உதவியாளர் மற்றும் 22 வயதான அவரது காதலன் ஆகியோருடன் அவர் வெளியே சென்றுள்ளார்.


திரும்பி வரும் போது, அந்த பெண்மணியும், அவரது நண்பரும் ராம விஹாரில் இருந்து ஒரு ஆட்டோரிக்ஷாவில் சென்றனர், அதற்கு பின் அவரை நான்காவது மாடியில் இருந்து விழுந்ததாக கேள்விபட்டேன் என அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.


சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பவத்தை பற்றி விசாரித்து வருகின்றனர்.