டெல்லியில் உலக அழகி மனுஷி சில்லருக்கு சிறப்பு நிகழ்ச்சி அவரை கவுரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மனுஷி சில்லருக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி விருது வழங்கி சிறப்பித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது, சில்லர் கோலியிடம் உங்களை முன்மாதிரியாக நினைத்திருக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.  


அதற்கு, விராத் கூறிய பதில்; ஒரு விஷயத்தை செய்யும்போது மனப்பூர்வமாக செய்யவேண்டும். நான் எப்போதும் மற்றவர்களை போல் இருக்க நினைத்தது இல்லை. நான் எப்போதும் நானாக மட்டுமே இருப்பேன். நீங்கள் நீங்களாக இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். மற்றவர்களை போல் நீங்கள் இருக்க நினைத்தால் உங்களால் வெற்றி பெற முடியாது என்று பதில் கூறினார்.