INX மீடியா நிறுவன முறைகேடு வழக்கு: சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

INX மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரும் 6-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ உத்தரவு!!


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது.


ஜூலை 3ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யவும் டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.ப.சிதம்பரம் இன்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அவர் மீது கைது நடவடிக்கை பாயாமல் இருக்கும் வகையில் டெல்லி  உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


இதை தொடர்ந்து சிதம்பரத்தின் முன் ஜாமினை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், ஜூன், 5 வரை அவரை கைது செய்ய தடை விதித்து, உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் தற்போது சிதம்பரத்திற்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது. அதில் ஜூன் 6-ம் தேதி சி.பி.ஐ., நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.