IPL 2018 தொடரின் 11-வது போட்டியில் 15_வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 


முதலில் பேட்டிங்செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை குவித்தது. 


கொல்கத்தா அணி சார்பில் நிதிஷ் ராணா மற்றும் குர்ரான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.


இதனையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக நரைனும் க்றிஸ் லின்னும் களமிறங்கினர். 


முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார் லின். அடுத்து வந்த உத்தப்பா - நரைன் ஜோடி அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. 


தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி, 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்றது.


இதன் மூலம், ஜெய்ப்பூரில் தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த, ராஜஸ்தானின் சாதனை பயணமும் முடிவுக்கு வந்தது