இன்று இரவு நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதும் போட்டியில் டாஸ் வென்றது மும்பை அணி. இன்னும் சற்று நேரத்தில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று மோதுகிறது.


ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடக்கும் 34-வது ஆட்டம் நடக்க உள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு ஹோல்கர் கிரிக்கெட் மைதானம் இந்தூரில் நடைபெறுகிறது.


மும்பை அணி இது வரை 8 போட்டிகளில் விளையாடி, 2-ல் மட்டுமே வென்றுள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியுற்ற அந்த அணி, பெங்களூர் அணிக்கு எதிரான தனது போட்டியில் அபார வெற்றி பெற்று தன் முதல் வெற்றியை பதிவுசெய்தது. இருப்பினும் இராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மீண்டும் தோல்வியை தழுவியது. 


இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. பிறகு நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்வியடைந்தது. இந்த தோல்விகளால் மும்பை அணி இனிவரும் போட்டிகளில் வென்றால் தான் இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை அணி இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்க்கொள்கிறது.


இதுவரை இரு அணிகளும் 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். அதில்,மும்பை இந்தியன்ஸ் 10 ஆட்டங்களிலும், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் 10 ஆட்டங்களிலும் விளையாடி சமநிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.