அவதூறான கருத்தை டிவிட்டரில் பதிவிட்டதிற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ஜோத்பூர் பட்டியலின சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ''எந்த அம்பேத்கர்? குறுக்குச் சட்டத்தை இயற்றியவர் மற்றும் அரசியல் அமைப்பு அல்லது நாட்டில் இட ஒதுக்கீடு எனப்படும் நோய்களைப் பரப்புபவர்களை உருவாக்கியவர்'' என அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்ததாக டி.ஆர் மெக்வால் என்பவர், ஜோத்பூர் பட்டியலின சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.


இந்நிலையில் மனுவை விசாரித்த ஜோத்பூர் பட்டியலின சிறப்பு கோர்ட், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது FIR பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.