மத்திய பிரதேசத்தில் தலைவிரித்து ஆடி வரும் மணல் மாஃபியா குறித்து செய்திகள் எழுதி வந்த பத்திரிக்கையாளர் சந்தீப் ஷர்மா லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப்பிரதேசம் மாநிலம் கோத்வாலி காவல்நிலையம் அருகில் தனது இருசக்கர வாகனத்தில் சந்தீப் ஷர்மா இன்று காலை பயணம் செய்கையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


கொலை செய்யப்பட்ட சந்தீப் ஷர்மா, தேசிய ஊடகம் ஒன்றில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் காவல்துறை உயரதிகாரி ஒருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது குறித்த செய்தியை, செல்போன் உரையாடல் ஆதாரத்தோடு வெளியிட்டார் இவர் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி பணியிடைமாற்றம் செய்யப்பட்டார்.



இதனால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கெனவே மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தீப் ஷர்மா புகார் அளித்திருந்தார். 


இந்நிலையில் இன்று காவல் நிலையத்திற்கு அருகிலேயே கொலை செய்யப் பட்டிருப்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!