தீவிர அரசியல் பயணத்தில் களமிறங்கியுள்ள நடிகர் கமலஹாசன் அவர்கள் தனது அடுத்தக்கட்ட சுற்றுபயணத்திற்கான அட்டவணையினை வெளியிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய கட்சி, கொடி, கொள்கை அறிவிப்பு என அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள கமல் அவர்கள் தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்து வருகின்றார். அந்த வகையில் முன்னதாக கடந்த ஏப்ரல் 4-ஆம் நாள் திருச்சி மார்கமாக சுற்றப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களினை சந்தித்தார்.


பின்னர் ஸ்டர்லைட் ஆலையினை எதிர்து போராடி வரும் மக்களை தூத்துக்குடிக்கு நேரில் சென்று சந்தித்தார். சமீபத்தில் யூடியூபின் வாயிலாகவும் தனது தொண்டர்களிடையே உரையாடினார்.



அந்த வகையில் தற்போது தனது அடுத்தக்கட்ட அரசியல் சுற்றுபயணத்தினை துவங்குவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி வரும் மே மாதம் 16,17,18 தேதிகளில் முறையே கன்னியகுமாரி, தூத்துகுடி, திருநெல்வேலி செல்லவுள்ளார்.


இதனையடுத்து வரும் ஜூன் மாதம் 8, 9, 10 ஆகிய தேதிகளில் முறையே திருப்பூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்!