மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல் கட்சியை அறிவிக்கும் முன் 'மையம் விசில் மொபைல் ஆப்' குறித்து ஏற்கனவே பேசியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் அறிவித்தபடி, ஊழலுக்கு எதிரான இந்த 'விசில் ஆப்' இன்று மாலை 5- மணி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.


இது குறித்து, கமல், முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது...!


மக்கள் கைகட்டி அமைதிக் காப்பதுதான் அனைத்திற்குமான பிரச்னை என்றும், அந்த நிலை மாற பிரச்னைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஆண்ட்ராய்டு, ஐஓஸ் இயங்குதளங்களில் இயங்கும் வகையில் மய்யம் விசில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.