திருச்சியில் நடைப்பெறவுள்ள மக்கள் நீதி மய்ய மாநாட்டில் கலந்துக்கொள்ள தொடர்வண்டி மார்கமாக திருச்சி புறப்பட்டார் கமலஹாசன்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சி பொன்மலை பகுதியில் நாளை மாலை 6 மணியளவில் மக்கள் நீதி மய்ய மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து வைகை விரைவு ரயில் மூலம் இன்று பிற்பகல் கமல்ஹாசன் புறப்பட்டார்.


இந்த பயணத்தின் போது ஆங்காங்கே மக்களை சந்திக்கவும் கமல் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்த நாளை நடைப்பெறவுள்ள மாநாட்டில் அவர் நேரடியாக மக்களிடம் உறையாற்றுவார் என கூறப்படுகிறது.


இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தொண்டர்கள் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!