அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய தோல் ஆராய்ச்சித்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க மறுத்ததால் கமல்ஹாசன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பிப்ரவரி 21 மதுரையில் பொதுக்கூட்டம் நடத்திய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும், கட்சியின் கொடியையும் தொடங்கினார். 


இன்று மத்திய தோல் ஆராய்ச்சித்துறை மாணவர்கள் சார்பில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகம் அனுமதியளிக்க மறுத்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.