14 வயது சீன சிறுவன் தனது ஆண் உறுப்புக்குள் 53 காந்த குண்டுகளை செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் இரவு விளையாடிக்கொண்டிருந்த போது சுமார் 53 ஆண்குறி காந்த குண்டுகளை தனது ஆண்குறியில் செலுத்தி வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளான். இதையடுத்து, அவற்றை எடுக்க முடியாமல் அடுத்தநாள் அப்படியே பள்ளிக்கு சென்றுள்ளான். அடுத்த நாள் அவரது உள்ளாடைகள் இரத்தமாக இருத்ததை தொடர்ந்து அவர் சற்று பயக்க ஆரமித்துள்ளார். 


இதையடுத்து, இரத்தத்தைப் பார்த்ததும், சிறுவன் தனது செயல்களைத் தாத்தாவிடம் விவரித்தார். ஜியாங் ஹுவா என்று மட்டுமே அறியப்பட்ட சிறுவனை விரைவான சிகிச்சைக்காக குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, காந்த பந்துகளின் இரண்டு சரங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். காந்த சக்தி காரணமாக, மணிகள் ஒன்றாக ஒட்டிக் கொண்டு ரத்தக்கசிவை ஏற்படுத்தின. உடனடியாக சிகிச்சையளிக்கவில்லை என்றால், அது அவரது உயிரைப் பறித்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 


இதை தொடர்ந்து, சிறுவனுக்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். அவர் ஒரு "ஆபத்தான நிலையில்" இருந்து காப்பாற்றப்பட்டதாக உள்ளூர் செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளது. செய்தி வெளியிட்டன. இது முதல் தடவையல்ல, சில மாதங்களுக்கு முன்பு, மற்றொரு 14 வயது சிறுவன் பாலியல் இன்பத்திற்காக தனது ஆண்குறியில் ஊசியைச் செருகினான். அவர் மூன்று நாட்கள் வரை சிறுநீர் கழிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.