Introverts Character Traits : நம்மில் பலர், பிறரிடம் அதிகம் பேசாதவர்களாக இருப்போம் அல்லது நம்மை சுற்றி இருக்கும் பலர் அப்படியிருப்பர். தேவையின்றி பேசாமல் இருக்கும் இவர்களை ஆங்கிலத்தில் Introvert என்று அழைப்பர். பிறரிடம் பேசாமல் இருந்தாலும், இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிறரிடம் பேசாமல் இருப்பவர்களின் குணாதிசயங்கள்:


நன்கு அறியும் திறன்:


பிறரிடம் அதிகம் பேசாதவர்களுக்கு, தவறானவர்களுடன் இருப்பதற்கு நாம் தனியாகவே இருந்து கொள்ளலாம் என்று தோன்றும். எனவே இவர்கள் தங்களின் பெரும்பாலான பொழுதுகளை தனியாகவே கழிப்பர். அப்படி தனிமையில் இருக்கும் போது அவர்கள் தங்களின் சிந்தனைகளுடன்தான் நேரம் செலவிடுவர். இது, தன்னை பற்றி நன்கு அறிந்து கொள்ளவும், தன்னை சுற்றி இருப்பவர்கள் பற்றி நன்கு அறிந்து கொள்ளவும் இவர்களுக்கு வழிவகுக்கும். 


கவனிக்கும் திறன்:


ஒருவர் அமைதியாக இருக்கிறார் என்றால், அவர் தன்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அதிகம் பேசுபவர்கள், பல்வேறு விஷயங்களில் பிசியாக இருப்பர். இதனால், தன்னை சுற்றி இருப்பதை கவனிக்க தவறி விடுவீர்கள். அமைதியாக இருப்பவர்கள், தங்களின் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு திருந்துவது மட்டுமல்லாது, பிறரின் தவறுகளையும் பார்த்து அதிலிருந்து கற்றுக்கொண்டு திருந்தி விடுவர். இதனால், அவர்களால் ஒரு விஷயத்தை வெகு விரைவாக கற்றுக்கொள்ளவும் முடியும். 


மனம் திறந்து கேட்பவர்கள்:


அதிகம் பேசாமல் இருப்பவர்களுக்கு, “இவர்களிடம் பேசித்தான் ஆக வேண்டும்..” என்ற நிர்பந்தம் எதுவும் கிடையாது. இதனால், அவர்களிடம் யார் என்ன பேசினாலும் அதை அவர்கள் பொறுமையுடன் கேட்டுக்கொள்வர். எப்போதாவது, தேவைப்படும் போது மட்டும் ஒரு வார்த்தை பேசினாலும் அதை நறுக்கென்று பேசுவர். இது, அவர்களுக்கு ஒரு உறவை வளர்த்தாலும் அந்த உறவு முத்தான உறவாக இருக்கும்.


மேலும் படிக்க | அடம் பிடிக்கும் குழந்தையை சமாளிப்பது எப்படி? சூப்பரான ‘இந்த’ ட்ரிக்கை யூஸ் பண்ணுங்க!


கற்பனை திறன்:


அதிகம் பேசாதவர்களிடத்தில் கற்பனை திறன் அதிகமாக இருக்குமாம். இவர்கள், பிறரை போல பேசிப்பேசி நேரத்தை வீணடிப்பதில்லை என்பதால் தங்களுடைய அந்த நேரத்தை கற்பனை திறனை வளர்த்துக்கொள்வதில் காட்டுகின்றனர். புதிய பொழுதுபோக்குகள், திறன் வளர்ச்சிகள் போன்றவற்றிற்காகவும் இவர்கள் நேரம் ஒதுக்குகின்றனர். மேலும், இப்படி அதிகம் பேசாதவர்கள் ஓவியர், எழுத்தாளர் போன்ற திறன்களில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்களாம். 


கவனம் மற்றும் சிந்தனை:


அதிகம் பேசாதவர்கள், தங்களின் வாழ்வில் எந்த அடியை எடுத்து வைத்தாலும் அதில் கவனத்துடனும் பொறுமையுடன், சிந்தித்துதான் செயல்படுவராம். அவர்கள், அவர்களையே நன்கு புரிந்து வைத்திருப்பதால் இது போன்று அவர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களின் வாழ்வும் அவர்களுக்கு பிடித்தது பாேல அமைகிறது.


மேலும் படிக்க | அமைதியாக இருப்பதால் இத்தனை பலன்கள் கிடைக்குமா? இனிமே கம்முன்னு இருக்கனும்…


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ