7வது ஊதியக்குழு புதுப்பிப்புகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. மார்ச் 2022 இல் அகவிலைப்படி அதிகரித்த பிறகு, இப்போது ஜூலை 2022 இல் மீண்டும் அகவிலைப்படி அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஏஐசிபி குறியீடுகள் குறைவாக வந்தபிறகு, இப்போது மார்ச் மாதத்தில் அதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த குறியீட்டின் எண்ணிக்கை வெளியான பிறகு, அகவிலைப்படியை அதிகரிப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன என இப்போது தெளிவாகத் தெரிகிறது.


மார்ச் மாதத்தில் 1 புள்ளி அதிகரிப்பு 


ஜனவரி 2022 இல், ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை 125.1 ஆக இருந்தது. பிப்ரவரியில் அது மேலும் சரிந்து 125 ஆகக் குறைந்தது. இதன் அடிப்படையில் மார்ச் மாதத்திலும் இது குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1 புள்ளி ஏற்றம் ஏற்பட்டு, இது 126 ஆக அதிகரித்துள்ளது.


4 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்


இப்போது மார்ச் எண்களின் வருகைக்குப் பிறகு, ஜூலை 2022 இல் அகவிலைப்படி மூன்று சதவிகிதம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இருப்பினும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் எண்கள் வந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். வரும் மாதங்களிலும் இதே நிலை தொடர்ந்தால், 4 சதவீதம் அகவிலைப்படி அதிகரிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் டிஏ அதிகரிக்குமா? ஏஐசிபிஐ தரவுகள் சொல்வது என்ன 


மார்ச் மாதத்தில் ஏஐசிபிஐ எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றம்


மத்திய ஊழியர்களின் 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. முதல் முறை ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரியிலும் இரண்டாவது முறை ஜூலையிலும் இந்த அதிகரிப்பு நடக்கிறது. ஜனவரி 2022-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு 3 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. இது மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாத நிலுவைத் தொகையுடன் (ஜனவரி முதல் மார்ச் வரை) இதை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


அடுத்த டிஏ திருத்தம் ஜீலையில் இருக்கும்


அடுத்த அகவிலைப்படி திருத்தம் ஜூலையில் இருக்கும். இதன் அடிப்படையானது, ஜனவரி முதல் ஜூன் வரையிலான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு ஆகும். ஜனவரி, பிப்ரவரியில் சரிவு இருந்தபோதிலும், மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது. ஜனவரியில் ஏஐசிபிஐ 125.1 ஆகவும் பிப்ரவரியில் 125 புள்ளிகளாகவும் இருந்தது. தற்போது மார்ச் மாதத்தில் இது 126 புள்ளிகளை எட்டியுள்ளது. அதன் பிறகு ஜூலையில் டிஏ அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.


நாட்டின் 88 தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் அமைந்துள்ள 317 சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) தரவு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 88 மையங்களுக்கும், நாடு முழுவதற்குமான குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், Fitment Factor-ல் மாற்றம் இருக்காது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR