7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், Fitment Factor-ல் மாற்றம் இருக்காது

7th Pay Commission: மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 28, 2022, 05:23 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி.
  • ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
  • இது குறித்த முடிவு எடுக்கப்படுமா?
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், Fitment Factor-ல் மாற்றம் இருக்காது title=

7வது ஊதியக் குழு: மத்திய ஊழியர்களுக்கான முக்கிய செய்தி!! மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் பேக்டர் பற்றிய முக்கிய புதுப்பிப்பு வந்துள்ளது. நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் மற்றவரோ மத்திய அரசு ஊழியராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

மத்திய அரசு சமீபத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து ஃபிட்மென்ட் பேக்டரிலும் சாதகமான முடிவு எடுக்கப்படும் என காத்திருந்த ஊழியர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. ஃபிட்மென்ட் பேக்டரை மாற்றுவதற்கான எந்த எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

3% டிஏ உயர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது

அகவிலைப்படியை சதவீதம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் மாத சம்பளத்தில் மூன்று மாத (2022 ஜனவரி முதல் 2022 மார்ச் வரை) நிலுவைத் தொகையுடன் டிஏவும் கிடைக்கும். ஆனால், ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையில் எந்த முடிவும் எடுக்கப்படாது என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஏப்ரல் மாத சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்? கணக்கீடு இதோ 

அதாவது, 2022 ஆம் ஆண்டிலும் ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிக்கப்படும் என்றே தோன்றுகிறது. கோவிட் மற்றும் பணவீக்கம் காரணமாக அரசாங்கத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதல் நிதிச்சுமையை இன்னும் அதிகரிக்க முடியாத நிலையில் அரசு உள்ளது.

நீண்ட கால கோரிக்கை

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. அகவிலைப்படியுடன் சேர்த்து, ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.

சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்

ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிக்கப்பட்டால், குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிக்கும். தற்போது பணியாளர்கள் 2.57 சதவீத ஃபிட்மென்ட் பேக்டரின் அடிப்படையில் சம்பளம் பெறுகின்றனர். அதை 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் குறைந்தபட்ச சம்பளம் 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அதாவது ரூ.18000 ஆக உள்ள ஊதியம் ரூ.26000 ஆக உயரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: 3 கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படலாம், ஊதியத்தில் ஏற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News