7வது ஊதியக்குழு சமீபத்திய செய்திகள்: நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சமீபத்தில், மத்திய அரசு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, ஜனவரி 2022 முதலான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவதாக நிதி அமைச்சகம் அறிவித்தது. இருப்பினும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படியின் 18 மாத அரியர் தொகையை ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.


ஊழியர்களின் சம்பளம் உயரும்


ஏற்கனவே அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. ஊழியர்களின் மேலும் மூன்று கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் நல்ல முடிவு எடுக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளம் மேலும் உயரும்.


மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: டிஏ அதிகரிப்பை தொடர்ந்து உயரும் பிற கொடுப்பனவுகள் 


எச்ஆர்ஏ உயர்வு சாத்தியம்


அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு வீட்டு வாடகை கொடுப்பனவை (எச்ஆர்ஏ) அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எச்.ஆர்.ஏ-வை உயர்த்த அரசு முடிவு செய்தால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் அதன் பலனைப் பெறுவார்கள்.


சிட்டி அலவன்ஸ் மற்றும் பயணப்படியும் அதிகரிக்கும்


அகவிலைப்படியுடன் ஹெச்ஆர்ஏ உயர்த்தப்பட்டால், அதன் தாக்கம் நகர உதவித்தொகை (சிட்டி அலவன்ஸ்) மற்றும் பயணப்படியிலும் தெரியும். அகவிலைப்படி அதிகரிப்புடன், இந்த இரண்டு கொடுப்பனவுகளும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கும்


அகவிலைப்படியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை தொடர்ந்து, வீட்டு வாடகை கொடுப்பனவான எச்ஆர்ஏ, பயணப்படி மற்றும் நகர கொடுப்பனவான சிட்டி அலவன்ஸ் ஆகியவை உயர்த்தப்பட்டால், அதன் மூலம் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு இருக்கும். 


பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஆதாயம் உண்டாகும்


அகவிலைப்படி உயர்வு காரணமாக, மத்திய ஊழியர்களின் வீட்டு வாடகைப் படி, பயணப் படியில் உறுதியான உயர்வு இருக்கும். ஒரே நேரத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படும் அதிகரிப்பின் பலனை ஊழியர்கள் பெறலாம். கடந்த 9 மாதங்களில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். மறுபுறம், இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 9455.50 கோடி ரூபாய் சுமை அதிகரிக்கும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அதிர்ச்சி, ஜூலையில் டிஏ அதிகரிப்பு இருக்காதா 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR