7வது ஊதியக்குழு சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் சம்பளமும் அகவிலைப்படியின் வடிவத்தில் அதிகரிக்கிறது. இது தவிர, பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகளின் பலன்களையும் ஊழியர்கள் பெறுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு ஊழியர் பணியில் இருக்கும்போது உயர் பட்டம் பெற்றால், அவருக்கு இந்த பட்டத்தின் பலனும் தனியாக கிடைக்கும். தற்போது உயர் பட்டப்படிப்பு முடித்த ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை மத்திய அரசு 5 மடங்கு உயர்த்தியுள்ளது. இதன் கீழ், பிஎச்டி போன்ற உயர் பட்டம் பெற்ற ஊழியர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.10,000 லிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


உயர்கல்விக்கான ஊக்கத்தொகை 5 மடங்கு அதிகரித்துள்ளது


உயர் பட்டப்படிப்பு படிக்கும் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க, 20 ஆண்டுகால விதிகளை பணியாளர் அமைச்சகம் திருத்தியுள்ளது. பழைய விதிகளின்படி, தற்போது வரை, பணியின் போது உயர் பட்டம் பெற்ற ஊழியர்களுக்கு, 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. 


தற்போது திருத்தத்திற்குப் பிறகு, 2019-ம் ஆண்டு முதல் இந்த ஊக்கத் தொகை குறைந்தபட்சம் ரூ.2000லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது. அதாவது, இப்போது பணியாளர்கள் உயர் பட்டங்களைப்  (ஹையர் டிகிரி) பெற்றால், அவர்களுக்கு அதிக ஊக்கத்தொகை கிடைக்கும். 


மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: 34% டிஏ பற்றிய முக்கிய அப்டேட்


யாருக்கு எவ்வளவு பலன் கிடைக்கும்?


 பணியாளர்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, 3 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான டிகிரி டிப்ளமோ படிப்பை முடித்தால் ரூ.10,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கு மேலான பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பை முடித்தால், ரூ.15,000 வழங்கப்படும். ஒரு ஆண்டு அல்லது அதற்கும் குறைவான கால அளவிலான முதுகலை பட்டம் / டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 25,000 வழங்கப்படும். பிஎச்டி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு ரூ.30,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.


இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்


முறையான கல்வித்தகுதிக்கான பட்டங்கள் அல்லது இலக்கியப் பாடங்களில் உயர் தகுதிகளைப் பெறுவதற்கு எந்த ஊக்கமும் வழங்கப்பட மாட்டாது என்று பணியாளர் அமைச்சகம் அதன் அறிவுறுத்தல்களில் தெளிவுபடுத்தியுள்ளது. பணியாளர்கள் பெற்ற பட்டம்/டிப்ளமோ பணியாளரின் பதவியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும், அல்லது இந்த பட்டம் அவர் பெறக்கூடிய அடுத்த பதவியில் செய்யப்படும் பணியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். 


திறமைக்கும் வேலைக்கும் இடையே நேரடியான தொடர்பு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR