7th Pay Commission Update: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்பட்டு, அவர்களது அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரித்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் ஒடிசா அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அரசு, ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை மீண்டும் 3% உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வரும். இந்த அறிவிப்புக்கு பிறகு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி, அலையாய் பரவியுள்ளது. 


அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் 3% உயர்வு


மத்திய அரசு ஏற்கனவே தனது ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) 31% ஆக உயர்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்ற அறிக்கையை வெளியிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தார். இந்த வரிசையில், ஒடிசா மாநில அரசும் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை உயர்த்தியுள்ளது. இப்போது ஒடிசா அரசு ஊழியர்களும் மத்திய அரசு ஊழியர்களைப் போலவே 31% அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தைப் பெறுவார்கள்.


ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வெள்ளிக்கிழமை அன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி அறிவித்தார். இந்த முடிவால் மாநிலத்தில் உள்ள சுமார் 7.5 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) கீழ் ஊழியர்களுக்கு 30 சதவீதத்தின் நிலுவைத் தொகையை வழங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2016 மற்றும் ஆகஸ்ட் 2017 க்கு இடையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தில் 50 சதவீத நிலுவைத் தொகையை ஊழியர்கள் பெறுவார்கள். இந்த முடிவால் மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். அதாவது, புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் கிடைத்து வருகின்றன. 


ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிரடி உயர்வு 


மாநில அரசு அகவிலைப்படியை உயர்த்திய பிறகு, தற்போது ஊழியர்களின் அகவிலைப்படியானது அடிப்படை சம்பளத்தில் 31% ஆகிவிட்டது. இந்த அதிகரிப்பு ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வரும். 


மத்திய அரசும் அதிகரிக்கக்கூடும்


மறுபுறம், மத்திய அரசும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டும் ஒருமுறை உயர்த்தக்கூடும். ஏஐசிபிஐ குறியீட்டின் படி, செப்டம்பர் 2021 வரை, அகவிலைப்படி 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இதன்படி அகவிலைப்படியில் 2 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.


இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது மேலும் 1 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2021க்குள் CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு ஏற்படுவது உறுதி. அதாவது மொத்த அகவிலைப்படி 3% அதிகரித்து 34% ஆக அதிகரிக்கும். இது ஜனவரி 2022 முதல் வழங்கப்படும், இதனால் மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) சம்பளம் உயரும்.


ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR