7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அரியர் தொகைக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் உள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகை தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை பற்றிய முடிவு எப்போது? 


18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் அரசாங்கத்தின் அஜெண்டாவில் சேர்க்கப்படவில்லை. அதாவது, அது குறித்த எந்த முடிவையும் எடுப்பது பற்றி அரசு இன்னும் எதுவும் பரிசீலிக்கவில்லை. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான நிலுவைத் தொகையை செலுத்தும் முடிவைப் பற்றி எந்தப் பரிசீலனையும் கொடுக்க அரசாங்கம் மறுத்துவிட்டது. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நிதி அமைச்சரின் பெரிய அறிக்கை


குறிப்பிடத்தக்க வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டு, 'கொரோனா தொற்றுநோய் காரணமாக, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. அந்த பணத்தை ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நலனுக்காக அரசாங்கம் பயன்படுத்தியது. தொற்றுநோய்களின் போது அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டது. இதனுடன், மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படவில்லை அல்லது டிஏ குறைக்கப்படவில்லை. முழு வருடமும் அகவிலைப்படி  மற்றும் அவர்களது சம்பளமும் வழங்கப்பட்டது.' என்று தெரிவித்திருந்தார்.


மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, மே 31-க்குள் அறிவிப்பு 


2 லட்சத்துக்கும் மேல் அரியர் தொகை கிடைக்கும்


ஜெசிஎம்-இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, லெவல்-1 ஊழியர்களின் அகவிலைப்படி அரியர் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும். அதேசமயம், லெவல்-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது லெவல்-14 (ஊதிய அளவு) ஊழியர்களின் அகவிலைப்படி அரியர்  தொகை, ரூ.1,44,200-2,18,200 ஆக இருக்கும். 


டிஏ அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்?


- குறைந்தபட்ச கிரேட் பே ரூ. 1800 (லெவல்-1 அடிப்படை ஊதிய அளவு ரூ.18000 முதல் ரூ.56900 வரை) உள்ள மத்திய ஊழியர்கள் ரூ. 4320 [{18000 இல் 4 சதவீதம்} X 6]-க்காக காத்திருக்கின்றனர்.


- [{ரூ.56900-ன் 4 சதவீதம்}X6] என்ற கணக்கீட்டில் இருக்கும் ஊழியர்கள் ரூ. 13,656 என்ற தொகைக்கு காத்திருக்கிறார்கள். 


- 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச கிரேட் பேவில் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை ரூ. 3,240 [{18,000-ன் 3 சதவீதம்}x6] என்ற அளவில் அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.


- [{ரூ. 56,9003-ன் 3 சதவீதம்}x6] என்ற கணக்கீட்டில் உள்ளவர்களுக்கு ரூ.10,242 கிடைக்கும்.


- ஜனவரி மற்றும் ஜூலை 2021 க்கு இடைப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைக் கணக்கிட்டால், அது 4,320 [{ரூ. 18,000-ன் 4 சதவீதம்}x6] ஆக இருக்கும்.


- [{₹56,900-ன் 4 சதவீதம்}x6] என்ற கணக்கீட்டுக்கு தொகை ரூ.13,656 ஆக இருக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் அதிகரிக்கிறதா அகவிலைப்படி, சமீபத்திய அப்டேட் இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR