ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்: ரீசார்ஜ் செய்யும் போது பயனர்கள் எந்த திட்டத்தில் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றன என்பதை கவனித்து முடிவெடுக்கிறார்கள். எந்த திட்டம் மலிவானது என்றும் எதில் அதிகபட்ச நன்மைகள் பெறப்படுகின்றன என்றும் பயனர்கள் ஆலோசிக்கிறார்கள். இணையத்தின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் புதிய திட்டங்களை வழங்குகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்டெல் அதன் பயனர்களுக்காக பல கவர்ச்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இப்போது ஏர்டெல்லின் மிகவும் மலிவான திட்டம் குறித்து இங்கு பார்க்கலாம். இந்த பிளானின் மொத்த செலவு 19 ரூபாயாகும். ஆனால் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் மிக அதிகம் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.


இரண்டு நாட்களுக்கான வேலிடிட்டி


ஏர்டெல்லின் (Airtel) ரூ .19 திட்டத்தில் பயனர்களுக்கு 2 நாட்கள் வேலிடிடி கிடைக்கும். இதில் பயனர்கள் தரவோடு வரம்பற்ற அழைப்பின் நன்மையையும் பெறுகிறார்கள். உங்கள் ரீசார்ஜ் முடிந்துவிட்டால், மாத ரீசார்ஜ் செய்ய இன்னும் நேரம் இருந்தால், அப்படிப்பட்ட நேரத்தில் ஏர்டெல்லின் இந்த 19 ரூபாய் திட்டம் சிறந்ததாக இருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறுவீர்கள்.


இணைய வசதியும் உள்ளது


இந்த ரீசார்ஜ் திட்டத்தில் Airtel 200MB தரவையும் உங்களுக்கு வழங்குகிறது. அதாவது, 20 ரூபாய்க்குக் குறைவான இந்த ரீசார்ஜில் இணைய வசதிகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நிறுவனம் இந்த திட்டத்தை "Truly Unlimited” பிரிவில் வைத்திருக்கிறது.


எஸ்எம்எஸ் வசதி இல்லை


19 ரூபாயின் இந்த திட்டத்தில் ஏர்டெல் உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு இலவச எஸ்எம்எஸ் (SMS) வசதி கிடைக்காது.


ALSO READ: வெறும் 250-க்கு ஒரு நாளுக்கு 3GB டேட்டாவை வாரி வழங்கும் BSNL..!


ஏர்டெல் ப்ரீபெய்ட் 199 ரூபாய் ரீசார்ஜ் ஏர்டெல்லின் ரூ 199 திட்டம் வாடிக்கையாளர்களிடையே ரூ .200 க்குக் குறைவான ப்ரீபெய்ட் திட்டங்களில் மிகவும் பிரபலமானது. ஏர்டெல்லின் ரூ .199 ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் 1 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள்.


இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் கால அளவு 24 நாட்களாகும். வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அணுகல் ஆகியவையும் வழங்கப்படுகிந்றன.


ஏர்டெல் வழங்கும் 179 ப்ரீபெய்ட் திட்டம்


இப்போது, Jio, Vi போன்ற போட்டியாளர்களுக்கு இடையில் தனது வாடிக்கையாளர்களை கவர Airtel பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஏர்டெல்லின் ரூ 179 திட்டம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த ரீசார்ஜில், வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவு தரவு வழங்கப்படுகிறது. இந்த மலிவான திட்டத்தின் செல்லுபடியாகும் கால அளவு 28 நாட்களாகும்.


இந்த திட்டத்தில் 2 ஜிபி தரவு வழங்கப்படுகிறது. 179 ரூபாய் திட்டத்தில் வரம்பற்ற இலவச அழைப்பு வழங்கப்படுகிறது. இதில், 300 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் கிடைக்குறது. 


ALSO READ: Alert மக்களே: Whatsapp OTP Scam பற்றிய இந்த முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR