இருமனம் இணையும் தருணம் திருமணம், கணவன் மனைவிக்குமான புரிதல் திருமண பந்தத்தின் ஆணிவேர் என பல சொற்சொடற்களை நாம் கேட்டிருப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் அரபு நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அவ்வாறு அமையவில்லை. திருமணமாகி சில தினங்களிலேயே தனது காதல் கணவரை விவாகரத்து செய்யும் அளவிற்கு மனவேதை அடைய வைத்துள்ளது, இவர்கள் இருவருக்கான புரிதல்.


அரபு நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. திருமணத்திற்கான முழு செலவினையும் தானே ஏற்றுக்கொண்ட அவருக்கு நிம்மதியான வாழ்க்கை அமையவில்லை. தன்னைவிட 13 ஆண்டுகள் சிறியவரான தனது கணவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.


திருமணத்திற்கு பின்னர் மற்ற காதல் ஜோடிகளை போலவே தேன்நிலவு சென்றுள்ளனர் இந்த அரபு ஜோடியும். தனது திருமணத்திற்கு ஆன செலவு முழுவதையும் மனைவி ஏற்கனவே ஏற்றுக்கொண்ட நிலையில், தேன்நிலவிற்கு ஆகும் செலவினை கணவர் எடுத்துக்கொள்ள வேண்டுமாய் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.


ஆனால் தேன் நிலவிற்கும் மனைவியின் கையினையே எதிர்பார்த்துள்ளார் கணவர், இதனால் ஆத்திரமடைந்த மனைவி ஒரு கட்டத்தில் பொருமையினை இழந்து தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.


இதற்காக அபுதாபியுல் உள்ள தனிப்பட்ட நிலைமை சேம்பர் உதவியினை நாடியுள்ள மனைவி, தனது விவாகரத்திற்கு பின் நீதிமன்றம் தனக்கு வழங்கும் எந்தவித சலுகைகளும்(ஜீவினாம்சம்) வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.