தங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்பது தான் ஒவ்வொருவரின் மன ஆசையாக இருக்கும். சிலர் தாங்கள் விரும்பிய துணையைப் பெற வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த பட்டியலில் நீங்களும் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் விரும்பும் வாழ்க்கைத் துணையைப் பெறுவது தொடர்பான சிறந்த பரிகாரங்கள் குறித்து ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பரிகாரங்கள் ஜோதிட வல்லுநர்கள், பண்டிதர்களால் பரிந்துரைக்கப்பட்டது. பகவான் விஷ்ணுவை வழிபட்டால் விரும்பிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.



மேலும் படிக்க | சனி பகவானின் வக்ர நகர்வினால் ‘இந்த’ ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்!


வியாழன் தோறும் ஐந்து வகையான மஞ்சள் பொருட்களை விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணித்து பூஜை செய்தால் மனதிற்கு ஏற்ற துணை கிடைக்கும். ஐந்து வகை மஞ்சள் பொருட்களில் தானியங்கள், உடைகள், பழங்கள், பூக்கள் மற்றும் இனிப்புகள் ஆகியவை அடங்கும். இவற்றின் நிறம் மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 வியாழக்கிழமைகள் செய்யவும். 


இதை தவிர வியாழக்கிழமை தோறும் சூரிய உதயத்தில் வீட்டில் அனைவருக்கும் உணவு சமைப்பதற்கு முன், முதலில்  சாப்பத்தி மாவில் சிறிது மஞ்சள் கலந்து சப்பாத்தி செய்ய வேண்டும். அந்த ரொட்டியில் நெய் மற்றும் தேன் சேர்த்து, அதிகாலையில் பசுவிற்கு உணவளிக்கவும்.


மேற்கண்ட பரிகாரங்களை செய்வதால், உங்கள் மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் மனதிற்கு ஏற்ற வாழ்க்கை துணையை மணம் முடித்து, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும். 


மேலும் படிக்க | செவ்வாய் தோஷத்தினால் திருமண தடையா; சில எளிய பரிகாரங்கள்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR