ராசிபலன் நவம்பர் 21 2021: ஞாயிற்றுக்கிழமை, சிம்மம் மற்றும் துலாம் ராசிக்காரர்களின் உடல்நிலை மோசமடையக்கூடும். கன்னி, கும்பம், கடகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அவர்களுக்கு பண வரவு இருக்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மகிழ்ச்சியுடன் நாள் தொடங்கும். குடும்பத்துடன் நல்லபடியாக நேரம் செலவிடலாம். உத்தியோகத்தில் நல்ல பண லாபம், பதவி உயர்வுக்கான அறிகுறிகள் இருக்கும். வியாபாரிகளுக்கு லாபகரமான சூழ்நிலை உள்ளது.


ரிஷபம்: இன்று நாள் முழுவதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வேலையில் நல்ல பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் நிதி நிலமை வலுவாக இருக்கும். உங்களுக்கு நல்ல நாளாக இன்று அமையும். உங்கள் அதிர்ஷ்டம் நன்றாக இருக்கும்.


ALSO READ: சாமுத்திரிகா சாஸ்திரம்: உங்கள் உடலின் ‘இந்த’ பாகங்கள் துடிக்கிறதா; எச்சரிக்கை!


மிதுனம்: உத்தியோகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் பணம் சரியான பணிகளில் செலவிடப்படும். மாணவர்கள் தேர்வில் சிறப்பாக செயல்படுவார்கள் ஆனால் ஒரு வித பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்படுவார்கள். யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். ஏனென்றால , அதனால் மனக்கசப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது


கடகம்: இன்று அதிர்ஷ்ட காற்று உங்களை நோக்கி வீசும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது, பணிபுரியும் துறையில் லாபம் கிடைக்கும் சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில்  சுப நிகழ்ச்சிகள் நடக்கும், அதில் பங்கேற்பீர்கள். அந்த நாள் முழுவதும் ஜாலியாக கழியும்.


சிம்மம்: உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும், இதனால் உங்கள் நாள் முழுவதும் அமைதியின்மை ஏற்படும். உத்தியோகத்தில் ஒருவரின் ஆதரவு உங்களுக்குப் பலன் தரும். உங்களின் விருப்பப்படி வேலை திட்டங்களை முடிப்பீர்கள்.


கன்னி: இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். வியாபாரத்திற்கு நல்ல நாள். குறிப்பாக, வணிக வர்க்கம் ஆதாயங்கள பெற்வார்கள், இதன் காரணமாக பணமும் லாபமும் கிடைக்கும். உங்கள் பணித் துறையில் பெரிய மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தின் சார்பாக கவலையில்லாமல் இருப்பீர்கள்.


துலாம்: அமைதியின்மை உணர்வீர்கள். உங்கள் உடல்நலக்குறைவு உங்கள் கவலைக்கு காரணமாக இருக்கும். மாணவர்களின் மனம் படிப்பில் ஈடுபடாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உத்தியோகத்தில் தடைகளால் சிரமப்படுவார்கள். வணிக பிரிவினருக்கு  விஷயங்கள் எப்போதும் போல் நடக்கும்.


விருச்சிகம்: ஞாயிற்றுக்கிழமை பண வரவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், பணம் தொடர்பான விஷயங்கள் நன்றாக இருக்கும். உங்கள் பழைய நண்பருடன் உரையாடலாம். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இருப்பினும், நீங்கள் ஒரு மோதல் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


தனுசு: அதிர்ஷ்டம் முழுமையாக வேலை செய்யாது என்றாலும், உங்களுக்கு ஏதேனும் நீதிமன்றம் தொடர்பான விஷயங்கள் இருந்தால், அவற்றில் சில நிவாரணம் கிடைக்கும். உங்களின் மனச் சோர்வு இன்று நீங்கும், எல்லா தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்


மகரம்: குடும்பத்தில் அக்கறை செலுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்காக உங்கள் பிஸியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்கி, அவர்களுடன் தரமாக நேரத்தை செலவிடுவீர்கள். மாணவர்கள் தேர்வு போன்றவற்றில் வெற்றி பெறுவார்கள்.


கும்பம்: வேலைத் துறையில் நாள் அனுகூலமாக இருக்கும். அனைவருடனும் இனிமையாகப் பழகுவீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை ஏற்படும். மக்கள் மரியாதை பெறுவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பதவி உயர்வும் ஏற்படலாம்.


மீனம்: பணிபுரியும் இடத்தில் அனைவருடனும் நன்றாகப் பழகுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவை அவ்வப்போது பெறுவீர்கள். நீங்கள் நல்ல பணம் சம்பாதிக்க முடியும். குடும்ப மகிழ்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.


ALSO READ: திருவண்ணாமலை தீபம் குறித்த இந்த முக்கியத் தகவல்கள் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR