7வது ஊதியக் குழுவின் அகவிலைப்படி உயர்வு: நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. தற்போது அகவிலைப்படி உயர்வு குறித்த சிறப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மாதங்களில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42 சதவீதத்திற்கு பதிலாக 46 சதவீதம் வழங்கப்படும். ஆம்... அரசு ஊழியர்களின் கணக்கில் 4% கூடுதல் அகவிலைப்படி வரும், அதன் காரணமாக அவர்களது சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். அகவிலைப்படியை அரசாங்கம் மீண்டும் ஜூலை மாதம் உயர்த்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏஐசிபிஐ தரவுகளை வெளியிட்டது


இந்த முறை ஜூலை 2023 இல் அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த தகவல் ஏஐசிபிஐ இன்டெக்ஸ் மூலம் கிடைத்துள்ளது. இம்மாதம் 0.72 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதன்பின் ஊழியர்கள் பெறும் அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


நிபுணர்களின் கூற்று என்ன? 


இம்முறையும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தும் என்று நிபுணர்கள் ஏற்கனவே கூறி வந்தனர். ஏஐசிபிஐ -இன் தரவுகளும் தற்போது இந்த திசையையே சுட்டிக்காட்டுகின்றன.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் 2 ஜாக்பாட் செய்திகள் கிடைக்கும், காத்திருக்கும் ஊழியர்கள்


கடந்த மாதங்களில் ஏஐசிபிஐ எண்ணிக்கை எப்படி இருந்தது?


ஏப்ரல் மாத புள்ளிவிவரம் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாத ஏஐசிபிஐ குறியீடு அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 133.3 புள்ளிகளாக இருந்தது, தற்போது 0.9 புள்ளிகள் அதிகரித்து 134.2 ஆக உள்ளது. இம்முறையும் அகவிலைப்படியில் நல்ல உயர்வு இருக்கும் என்பது இதிலிருந்து தெரிகிறது.


தரவை வெளியிடுவது யார்?


ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில், ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு எவ்வளவு உயர்த்தும் என்று முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) புள்ளிவிவரங்கள் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படுகின்றன. இந்த குறியீடு 88 மையங்களுக்கும் மற்றும் நாடு முழுவதற்கும் தயாரிக்கப்பட்டுள்ளது.


ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? 


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் எண்களுக்குப் பிறகு, இப்போது தொழிலாளர் அமைச்சகம் ஏப்ரல் மாதத்திற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏஐசிபிஐ மதிப்பீட்டு எண் 133.3 -லிருந்து 134.2 ஆக உயர்ந்துள்ளது. 


இந்த எண் அதிகரித்துள்ளதால், அகவிலைப்படியும் 4 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  அதாவது தற்போதைய 42 சதவீதத்திலிருந்து ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். 


எனினும், மே 2023 முதல் ஜூன் 2023 வரையிலான புள்ளிவிவரங்கள் இனி வரவுள்ளன. அவை வந்த பிறகே ஜூலை முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது பற்றிய முழுமையான தெளிவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


புதிய விகிதங்கள் ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் ரக்ஷாபந்தன் பண்டிகைக்கும் தீபாவளிக்கும் இடையிலான காலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும், எப்போது அறிவிக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 


அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் இதன் மூலம் 48 லட்சம் ஊழியர்களும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்பபடி  (42 x 29200) / 100 என்ற சூத்திரத்தின் மூலம் தீர்மானிக்கப்படும். அதேபோல், ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணமும் கணக்கிடப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission ஜாக்பாட் செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பெரிய குட் நியூஸ்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ