7வது சம்பள கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அரசாங்கத்திடமிருந்து ஒரு பெரிய பரிசு கிடைக்கவுள்ளது. வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது குறித்து அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஒரு சூத்திரத்தை அரசு உருவாக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் கீழ் ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இதுமட்டுமின்றி அவர்களது குறைந்தபட்ச ஊதியத்தையும் உயர்த்த அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கலாம்


ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்களின் தரப்பிலிருந்து நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இதை தற்போது அரசு செய்யக்கூடும் என சொல்லப்படுகின்றது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் எவ்வளவு அதிகரிக்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் தற்போது 2.57 ஆக உள்ளது. அகவிலைப்படி தற்போது 42 சதவீதமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்கப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கக்கூடும். 


அடிப்படை சம்பள உயர்வும் சாத்தியமாகும்


2024 ஆம் ஆண்டு நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதன் காரணமாக ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பு 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படலாம். இதன் மூலம் ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள். இதன் மூலம் மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளத்திலும் உயர்வு இருக்கும் என்று நம்பப்படுகின்றது. தற்போது, ​​ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 18,000 ஆகும். அலவன்ஸ்களுடன், அவர்களின் சம்பளம் ரூ. 46,260 ஆக உள்ளது. தற்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரித்து அது 3.68 ஆனால், ஊழியர்களின் ஊதியம் 95,680 ரூபாயாக அதிகரிக்கும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் ஊழியர்களுக்கு 2 மாஸ் செய்திகள்..... அடிச்சது ஜாக்பாட்!!


ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2016 இல் அதிகரிக்கப்பட்டது


முன்னதாக 2016 ஆம் ஆண்டில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டது. அதே ஆண்டில் தான் ஏழாவது ஊதியக் குழுவும் அமல்படுத்தப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 6,000 -லிருந்து ரூ. 18,000 ஆக உயர்த்தப்பட்டது. மறுபுறம், ஃபிட்மென்ட் ஃபாக்டர் விகிதங்கள் திருத்தப்பட்டால், ஊழியர்களின் சம்பளம் ரூ. 18,000 லிருந்து ரூ 26,000 ஆக உயரும். அதன் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் 44.44% உயர்வைக் காண முடியும்.


சம்பளம் எவ்வளவு உயரும்?


ஏழாவது ஊதியக் குழுவின் படி, தற்போது ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆகும். இதில் மாற்றம் இருந்தால் முழு சம்பளத்திலும் மாற்றம் ஏற்படும். ஆகையால் இதை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது, ​​ஃபிட்மென்ட் ஃபாக்டரின் 2.57 மடங்கு மற்றும் அடிப்படை சம்பளம் ரூ. 18000 என்ற அடிப்படையில், இதர அலவன்ஸ்கள் தவிர்த்து, ரூ.18,000 X 2.57 = ரூ.46260 கிடைக்கிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக உயர்த்தப்பட்டால், மற்ற அலவன்ஸ்கள் தவிர்த்து, ஊழியர்களின் சம்பளம் 26000 X 3.68 = ரூ.95680 ஆக உயரும்.


அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை


2024 ஆம் ஆண்டில் மதிப்பாய்வு அடிப்படையில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 16% டிஏ ஹைக்.. அரியரும் கிடைக்கும், உத்தரவு வெளியானது!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ