7வது ஊதியக்கமிஷன் 2023: வரும் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். 2024 ஆம் ஆண்டில், அவர்களது ஊதியம் மிக அதிகமான அளவில் ஏற்றம் காணவுள்ளது. இதனுடன் ஊழியர்கள் இன்னும் பல பரிசுகளையும் பெறவுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு சில குறிப்பிட்ட ஆதாயங்கள் வரும் மாதங்களில் கிடைக்கவுள்ளன. ஊழியர்களின் நலனுக்காக அரசு மொத்தம் மூன்று பெரிய முடிவுகளை எடுக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவற்றில் மிகப் பெரிய ஆதாயம் ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக இருக்கும். ஊழிய்ரகளின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து 2023 -ல் அதாவது இந்த ஆண்டில் அரசு ஒரு முகப்பெரிய முடிவை எடுக்கக்கூடும். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு இந்த பரிசை வழங்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இது தவிர, அகவிலைப்படி உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்தும் அரசு முடிவு எடுக்கலாம்.


7வது சம்பள கமிஷன்: ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும்


மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. அகவிலைப்படி உயர்வு, ஹெச்ஆர்ஏ உயர்வு, பதவி உயர்வுக்குப் பிறகு தற்போது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றிய விவாதமும் சூடுபிடித்துள்ளது. ஊழியர்களின் சம்பளத்தை ரூ 8,000 உயர்த்துவது குறித்து அரசாங்கம் நேரடியாக பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டரில் அதிகரிப்பு ஏற்பட்டால், அதன் மூலம், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை பலப்படுத்த முடியும். தற்போது, 7வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக, 18,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படலாம். அதைத் தொடர்ந்து ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும்.


மேலும் படிக்க | 8th Pay Commission அட்டகாசமான அப்டேட்: 44% உயரும் ஊதியம்.. மிக விரைவில் நல்ல செய்தி!!


அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கும்


ஒவ்வொரு ஆண்டும் போலவே, 2023 ஆம் ஆண்டிலும் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி இரண்டாவது முறையாக ஜூலை மாதத்தில் உயர்த்தப்படும். இதுவரையிலான பணவீக்க புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது. இந்த 3 மாதங்களில் குறியீட்டு எண் வேகமாக வளர்ச்சியடைந்தால், 4 சதவீத அதிகரிப்பு உறுதியாகும். குறியீட்டில் எந்த வித அதிகரிப்பும் இல்லாமல் நிலையாக இருந்தாலோ, அல்லது அதில் சரிவு ஏற்பட்டாலோ, அகவிலைப்படி அதிகரிப்பு 3 சதவிகிதமாக இருக்கும். 


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்குமா?


அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைத்தால், அது மத்திய ஊழியர்களுக்கு அரசு வழங்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும். 2023 ஆம் ஆண்டில், பூரணி பென்ஷன் யோஜனாவும் செயல்படுத்தப்படலாம். பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. சில மாநிலங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. 7வது ஊதியக் குழுவின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்குள் மத்திய ஊழியர்களுக்கு மோடி அரசாங்கம் அதை செயல்படுத்த முடியும். பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்) தொடர்பாக மத்திய அரசின் சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்தத் துறையில் செயல்படுத்தலாம் என்று தற்போது கேட்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கான நலன்களை அதிகரிக்க, அதில் திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: தேர்தலுக்கு முன் அரசு தரவுள்ள பெரிய பரிசு... ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ