பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அதன் பிரமாண்டமான துவக்கத்திலிருந்து 50 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது, இன்று 51 வது நாளில், போட்டியாளர்களுக்கு புதிய பணி ஒதுக்கப்பட்டுள்ளது, இது இரண்டு நாட்களுக்கு தொடரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று பிக் பாஸ் (Bigg Boss Tamilவீட்டில் கால்சென்டர் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. கால்செண்டர் ஊழியர்களாக ரம்யா, சம்யுக்தா மற்றும் பாலாஜி ஆகியோர் இருக்க அவர்களிடம் சக போட்டியாளர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றும் கேள்விகள் கேட்பதற்கு எந்த விதமான வரைமுறையும் இல்லை என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்.



 


ALSO READ | இது என்ன புது டாஸ்க்...அர்ச்சனாவிடம் வசமாக சிக்கிய பாலா....புரோமோ வீடியோ!


 


இன்றைய முதல் இரண்டு புரோமோவில் அர்ச்சனா (Archanaபாலாஜி (Balajiசண்டை காணப்பட்டது. இந்த நிலையில் அடுத்த சண்டையாக சனம் (Sanam Shetty) மற்றும் சம்யுக்தா காட்சிகள் இன்றைய மூன்றாம் புரமோவில் உள்ளன. 


இன்றைய மூன்றாம் புரமோவில், ‘நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் நீங்கள் வாயை திறந்தால் ஒரே கலீஜ் ஆகத்தான் இருக்குது' என்று சனம்ஷெட்டியிடம் சம்யுக்தா (Samyuktha Karthik) கூற, அதற்கு சனம் ’வாயைத் திறந்தால் கலீஜ் என்று சொல்வது நம்ம மைண்டில் கலீஜ் இருந்தால்தான் வாயில் வரும்' என்று கூறுகிறார். 



மேலும் கேப்டன்ஷிப் டாஸ்க் குறித்து சனம் ஒரு கேள்வியை கேட்க அதற்கு சம்யுக்தா, 'அது அவங்கவங்க வளர்ப்பை பொறுத்தது’ என்று கூறுவது சண்டையை இன்னும் அதிகரிக்க வைத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



ALSO READ | 'பிக் பாஸ் தமிழ் 4' இல் மீண்டும் நுழையும் இந்த பிரபலம்?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR