தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது பின்னர், உடற்கூறு ஆய்வில் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும், அதனால் மயங்கி தவறுதலாக குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக என கூறப்பட்டது. அனைத்து விசாரணைக்கு பிறகு நேற்று இரவு நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது.


அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீ தேவியின் உடல் முதலில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்பு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். 


திரையுலகினர் மட்டுமல்லாது, அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 


மும்பை அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்ரீதேவி உடலின் இறுதி ஊர்வலம் முடிந்து வில்லே பார்லே பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.


இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி இறந்தது குறித்து அவரது கணவர் போனி கபூர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்:-


"இந்த உலகத்திற்கு ஸ்ரீதேவி வெறும் நடிகை, ஆனால் எனக்கு அவர் காதலி, மனைவி, தோழி, என் மகள்களின் தாய் - அவர்களுக்கு எல்லாமே ஸ்ரீதேவிதான். அவர் இல்லாமல் இனி நாங்கள் எப்படி வாழ போகிறோம் என்பதை நினைத்து தான் வருந்துகிறேன்."


"ஊடகங்கள் ஸ்ரீதேவி பற்றி பேச நினைத்தால் நல்ல விஷயங்கள் பற்றி பேசுங்கள். ஒரு நடிகைக்கு இறப்பு என்பது கிடையாது, அவர் எப்போதும் வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டு தான் இருப்பார்" என கூறியுள்ளார்.