திருமணத்தன்று துணைபெண் மீது காதலில் விழுந்த மாப்பிள்ளை; இருவரையும் திருமணம் செய்த கொடுமை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த 22 வயதுடைய கேராலின் ஹென்றி இவருக்கும் இவரது காதலன் ஜஸ்டின் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ளவதற்காக கேராலின் அவரது ஆன்லைன் பெண் நண்பர் லானாவை அழைத்துள்ளார். 


மேலும், அவர் தான் தனக்கு துணைப்பெண்ணாக (bridesmaid) வர வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார். லானாவிற்கும், கேராலினிற்கும் இடையே இருந்த நட்பு ஆன்லைன் மற்றும் போன்காலில் தான் இவர்கள் அதுவரை ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தது இல்லை. தனது திருமணத்தில் சந்தித்து விடலாம் என்ற ரீதியில் திட்டமிட்டிடுள்ளார் கேராலின்.


இவர்களது திருமணத்தின் போது லானா துணைப்பெண் என்பதால் அழகாக ஆடை அணிந்து வந்திருந்தார். அதை பார்த்ததும் கேராலினை திருமணம் செய்யவிருந்த ஜஸ்டினிற்கு லானா மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. கேராலினிற்கும் ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் காதல் கொள்ளும் வித்தியாமான குணம். இதற்கிடையில் கேராலினிற்கும் லானாவின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. 



அதாவது திருமணம் செய்து கொள்ளபோகும் பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் திருமணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு வேறு ஒரு பெண் மீது ஆசை வந்துவிட்டது. இருவரும் கலந்து பேசி லானாவுடனும் பேசி ஒரு முடிவை எடுத்தனர். அதன்படி 3 பேரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்வது என்ற முடிவு செய்து. ஜஸ்டினும், கேராலினும் திருமணம் செய்துவிட்டனர். இவர்கள் இருவருடன் லானாவும் சேர்ந்து வாழ்கிறார். 


இதில் கேராலினிற்கும், லானாவிற்கும் செக்ஸ் மீது ஆசை கிடையாது. அதனால் அதற்கு மதிப்பளித்து ஜஸ்டீனும் அவர்களை வற்புறுத்தாமல் ஒரே வீட்டில் 3 வது செக்ஸ் ரீதியிலான உறவு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இதை கேராலின் ஒரு வீடியோவாக எடுத்து தனது யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.