பள்ளி மாணவனுடன் வகுப்பறையில் உடலுறவு மேற்கொண்ட ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் பிரிட்டனி ஆன் சமோரா (Brittany Zamora). அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்,  இவர் அதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவன் ஒருவருடன் அடிக்கடி உடலுறவு வைத்துள்ளார். 


அவரும் அந்த மாணவனும் பள்ளியின் வகுப்பைறை, கழிப்பறை, ஆசிரியையின் கார் உள்ளிட்ட பல இடங்களில் உடலுறவு வைத்துள்ளனர். இது மட்டுமில்லாமல் தினமும் செல்போனில் ஆபாசமாக பேசுவது, புகைப்படங்களை பகிர்வது என பல செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 


இந்நிலையில், சமோராவிற்கு வேறு ஒரு மாணவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு மாணவர்களுடன் ஒரே நேரத்தில் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என அவர் எண்ணியுள்ளார். இதனால் அந்த இரண்டாவது மாணவனிடம் தனக்கும் முதல் மாணவனுக்கும் இடையே இருக்கும் உறவை கூறி அவர்கள் இருவரும் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி அவரை ஆசைக்கு இணங்க அழைத்துள்ளார். 


ஆனால் அந்த இரண்வாது மாணவன் இது குறித்து தனது பள்ளியில் வேலை பார்க்கும் வேறு ஒரு ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் மூலம் முதல் மாணவனின் பெற்றோருக்கு இந்த விஷயம் சென்றுள்ளது. அவர்கள் முதல் மாணவனின் செல்போனை ஆய்வு செய்ததில் இவர்கள் இருவரும் தினமும் இரவு நேரங்களில் செக்ஸ் சாட் செய்தது தெரியவந்தது. இதையடுத்து முதல் மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சமோராவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். 


இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. அதில், சமோராவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.