ராகு கேது பெயர்ச்சி 2022: இன்று நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தங்கள் ராசியை மாற்றியுள்ளனர். ராகு-கேது கிரகங்களின் பெயர்ச்சி ஜோதிடத்தில் ஒரு பெரிய நிகழ்வாகும். ஏனெனில் அவை 18 மாதங்களில் ராசியை மாற்றுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகு கேது ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும். இந்த மாற்றம் சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் அளிக்கின்றன. இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மக்களின் வாழ்வில் நீண்ட காலம் நீடிக்கிறது. ராகு மற்றும் கேது பாவ கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இன்று அதாவது ஏப்ரல் 12ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும் என்பதை இந்த பதிவில் காணலாம். 


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் சஞ்சாரம் சுப பலன்களைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் ஊதியம் அதிகரிக்கும். வேறு வழிகளிலும் பணம் வந்து சேரும். இந்த காலத்தில் பணம் நன்றாக சேரும். சேமிப்பில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் பணம் முதலீடு செய்வது நல்லது. இப்போது முதலீசு செய்யப்படும் பணம் நல்ல லாபத்தை அளிக்கும். 


கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இந்த சஞ்சாரம் தொழில் மற்றும் வியாபாரம் இரண்டிற்கும் ஏற்றதாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் கூடும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. வியாபாரிகளும் லாபம் அடைவார்கள்.


மேலும் படிக்க | அஸ்தங்கத்திலிருந்து விடுபடும் புதன்: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் 


துலாம்


இந்த நேரம் துலா ராசியினருக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும், மரியாதையையும் தரும். அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவார்கள். இது சம்பாத்தியம் கூடும் நேரம். பண வரவு நன்றாக இருக்கும். தற்போது உங்களுக்கு நேரம் சாதகமாக இருப்பதால், பணம் ஈட்ட புதிய வழிகளை முயற்சி செய்யலாம். உங்கள் இலக்குகளை நோக்கி செல்வதில் நீங்கள் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்.


தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி நல்ல பணப் பலன்களைத் தரும். அதிக பணம் சம்பாதிப்பீர்கள். ஆனால் செலவுகளும் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அலைமோதும். 


மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். தாயின் மூலம் பணம் கிடைக்கும். பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பயணங்களின் மூலம் பல நன்மைகள் ஏற்படும். வேலை அல்லது வசிக்கும் இடத்தில் மாற்றம் ஏற்படலாம். பல சாதனைகளை செய்து முடிப்பீர்கள். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க |  பாவங்களில் இருந்து விமோசனம் தரும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR