ஜோதிடத்தில், எந்த ஒரு கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சேர்க்கை அனைத்து ரசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதில் சில ராசிகள் நேரடியான் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரிய பகவான் ஏற்கனவே கும்ப ராசியில் சஞ்சரித்துள்ளார். குரு ஏற்கனவே கும்ப ராசியில் அமர்ந்துள்ளார். ஜோதிடத்தில், இந்த இணைப்பு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இவ்விரு கிரகங்களுக்கிடையில் நட்பு உணர்வு இருப்பதால் பல ராசிக்காரர்களுக்கு இந்தச் சேர்க்கை சுபமாக அமையும்.


சூரியன், வியாழனின் இணைப்பின் தாக்கம் பல ராசிகளில் இருந்தாலும், இந்த சேர்க்கை  3 ராசிக்காரர்களுக்கு மிகச்சிறப்பான பலன்களைத் தரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


மேஷம்: 


ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11வது வீட்டில் சூரியன் மற்றும் வியாழன் இணைவு உருவாகிறது. இந்த வீடு வருமானத்தின் வீடாக கருதப்படுகிறது. எனவே, இந்த இணைப்பின் போது வருமானம் அதிகரிக்கும். 


வருமானம், பண சேர்க்கைக்கான புதிய வழிகள் திறக்கப்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துங்கள். தொழிலில் முதலீடு செய்வதற்கும் இந்த நேரம் சாதகமானது. மேஷத்தை ஆளும் கிரகம் செவ்வாய் ஆகும். சூரியனும் வியாழனும் செவ்வாயுடன் நட்பு உணர்வைக் கொண்டுள்ளனர். ஆகையால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை மங்களகரமானதாக இருக்கும்.


ரிஷபம்: 


ரிஷப ராசியில் இந்த சேர்க்கை பத்தாம் இடத்தில் நடக்கிறது. பத்தாம் வீடு தொழிலுக்கான வீடாகக் கருதப்படுகிறது. புதிய வேலை வாய்ப்புகள் வரக்கூடும். பணியில் உள்ளவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலதிகாரியுடன் நல்லுறவு இருக்கும். 


மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரம் இந்த ‘5’ ராசிகளுக்கு அளவிட முடியாத செல்வத்தைத் தரும்! 


வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இது மட்டுமல்ல, வியாபாரத்தில் புதிய உறவுகள் உருவாகக்கூடும். அதன் பலன் எதிர்காலத்தில் உங்களுக்குத் தெரியும்.


மகரம்: 


ஜோதிட சாஸ்திரப்படி, மகர ராசியில் இருந்து இரண்டாவது வீட்டில் சூரியன் மற்றும் வியாழன் இணைவு உருவாகிறது. இது பணம் மற்றும் பேச்சுக்கான வீடாகும். இந்த சேர்க்கை திடீர் பண ஆதாயத்திற்கு வழிவகுக்கும். 


இதுமட்டுமின்றி, வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் சில முடிவுகள் உங்களுக்கு நல்ல ஆதாயங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சந்தேகம் கொண்டு சஞ்சலம் அடையும் ராசிக்காரர்கள் இவர்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR