சந்தேகம் கொண்டு சஞ்சலம் அடையும் ராசிக்காரர்கள் இவர்கள்

Astrology: அதிகமாக சந்தேகப்படும் நபர்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவர்களுக்கு தொட்டதற்கெல்லாம் சந்தேகம் ஏற்படும். எதையும், யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 4, 2022, 12:23 PM IST
  • இந்த நபர்கள் எப்போதும் தங்கள் துணையை சந்தேகிக்கிறார்கள்.
  • சந்தேக புத்தி அவர்களது மனதில் புகுந்துகொண்டு அவர்களை ஆட்டிப்படைக்கும்.
  • மற்றவர்களுக்கான இடைவெளியை அளிக்க தவறி விடுகிறார்கள்.
சந்தேகம் கொண்டு சஞ்சலம் அடையும் ராசிக்காரர்கள் இவர்கள் title=

ஒவ்வொருவரும் வித்தியாசமான மனநிலை, திறன்கள், குணம் மற்றும் பழக்கவழக்கங்களுடன் பிறக்கிறார்கள். இவற்றில் சில விஷயங்கள் சிலருக்கு பிறவியிலேயே இருக்கின்றன. சில பழக்கங்கள் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கின்றன. 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு நபரின் இயல்பு, நடத்தை, ஆளுமை மற்றும் எதிர்காலம் ஆகியவையும் அவரது ராசியின் இயல்பால் பாதிக்கப்படுகிறது. பொதுவாக ராசி சம்பந்தமான குணங்களும் தோஷங்களும் அந்த ராசிகளைக் கொண்ட மனிதர்களிடம் காணப்படும். அதிக சந்தேகப்படும் நபர்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவர்களுக்கு தொட்டதற்கெல்லாம் சந்தேகம் ஏற்படும். எதையும், யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, 3 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணை / காதலன் / காதலியை அவ்வளவு எளிதாக நம்ப மாட்டார்கள். அவர்களது ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக்கோண்டே இருப்பார்கள். யார் அந்த சந்தேகப்பேர்வழி ராசிகள் என இந்த பதிவில் காணலாம். 

சந்தேகம் கொண்டு சஞ்சலம் அடையும் ராசிகள் இவர்கள்

மேஷம்: 
மேஷ ராசிக்காரர்கள் இயற்கையில் மிகவும் சந்தேக புத்தி கொண்டவர்கள். குறிப்பாக இந்த ராசிப் பெண்கள் இந்த விஷயத்தில் அதிக சந்தேகப்படுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் கணவனையோ அல்லது காதல் துணையையோ ஒருபோதும் எளிதில் நம்ப முடியாது. 

மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென்று சில பணிகளை ஏற்படுத்திக்கொண்டு அவற்றில் தங்களை மும்முரமாக வைத்திருப்பது நல்லது. இல்லையெனில் அவர்களுக்கு வேலை இல்லாதபோது, சந்தேக புத்தி அவர்களது மனதில் புகுந்துகொண்டு அவர்களை ஆட்டிப்படைக்கும். இது அவர்களுக்கும் அவர்களது துணைக்கும் ஆபத்தாகவும் அமையலாம். 

மேலும் படிக்க | சுக்ரனின் அருளால் இம்மாதம் முழுவதும் 4 ராசிகள் காட்டில் பண மழை பெய்யும்! 

ரிஷபம்: 
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் துணையை மிகவும் நேசிக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கும் தங்கள் துணைக்கும் இடையில் வலுவான, நம்பிக்கையான உறவை வைத்திருக்க விரும்புகிறார்கள். எனினும், இவர்களால் இவ்வாறு செய்ய முடியாமல் போகிறது. இவர்களால், தங்கள் கணவன் / மனைவி / காதலன் / காதலியின் தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவற்றை அவ்வப்போது சந்தேக புத்தியுடன் ஆய்வு செய்யாமல் இருக்க முடியாது. எனினும், இவர்கள் தங்கள் துணையை மிக அதிகமாக நேசிக்கிறார்கள். இந்த சந்தேக குணமும் இவர்களது நேசத்தின் ஒரு வெளிப்பாடாகவே உள்ளது. 

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் துணைக்கு அவர்களுக்கான இடைவெளியை அளிக்க தவறி விடுகிறார்கள். இவர்களுக்கு ப்ரைவசி என்ற சொல்லே பிடிக்காது என்று கூட சொல்லலாம். அவர்கள் தங்கள் துணையை எப்போதும் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள்.

தங்கள் துணை ஒரு சிறிய விஷயத்தை தங்களிடம் கூறவில்லை என்றாலும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அதற்காக சண்டையிடத் தொடங்கிவிடுவார்கள். பாசம் இருப்பது நல்லதுதான், ஆனால் அதுவே பாரமாகிவிடக் கூடாது. இவர்கள் காட்டும் முரட்டுத்தனமான பாசத்தால் சில சமயம் இவர்களுடன் வாழ்வது கூட கடினமாகி விடுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனியின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி உண்டாகும், வியாபாரம் செழிக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News