8வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திர அரசு ஊழியர்களுக்கு இது முக்கியமான காலகட்டம். தற்போது அவர்களுக்கு பல நல்ல செய்திகள் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது அகவிலைப்படி அதிகரிப்பு. சமீபத்தில் அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படியை 38 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக உயர்த்தியது. இது தவிர இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் ஊழியர்கள் காத்திருக்கின்றனர். அதில் 8 ஆவது ஊதியக்குழ்வின் உருவாக்கமும் ஒன்றாகும். விரைவில் 8வது ஊதியக்குழு தொடர்பாக மத்திய ஊழியர்களுக்கு பெரும் செய்தி வரப்போவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்களின் சம்பளம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை கடந்த மாதம் 24 ஆம் தேதி 4 சதவீதம் உயர்த்தியது. இதற்குப் பிறகு மொத்த டிஏ 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதே இதற்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.


8வது ஊதியக் குழு குறித்து அரசு ஊழியர்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய பணியாளர்கள் 7வது ஊதியக்குழுவின் படி அடிப்படையில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஆனால் 8வது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அரசு 8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், 2024க்குள் அது அறிவிக்கப்படலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | DA Hike: அடுத்தடுத்து வரும் அகவிலைப்படி உயர்வு... இன்று வெளியாகும் அறிவிப்பு?


2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் 8 ஆவது சம்பள கமிஷனை பற்றி மத்திய அரசு அறிவிக்கலாம் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு முன் இதை விளம்பரப்படுத்தினால், ஊழியர்களின் பங்களிப்பும் பெருமளவு கிடைக்கும். இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், 2024 இறுதிக்குள், 7வது ஊதியக் குழுவுக்குப் பதிலாக, 8வது ஊதியக் குழுவுக்கான அறிவிப்பு வரலாம். அதன் பின்னர் 2026 ஆம் ஆண்டுக்குள் இது அமலில் வரக்கூடும். 


8 ஆவது ஊதியக் குழு அமலுக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ​​7வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக உள்ள நிலையில், சம்பளம் 14.29 சதவீதம் அதிகரித்து, குறைந்தபட்ச சம்பளம் 18 ஆயிரமாக உள்ளது. 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 மடங்காகும். அந்த நிலையில் ஊதியம் 44.44% அதிகரிக்கும். மேலும் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... அடிப்படை ஊதியத்தில் அதிரடி ஏற்றம் விரைவில், கணக்கீடு இதோ!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ