வயதாகும்போது மூட்டு வலி பிரச்னையும் அதிகரிக்கிறது. கடுமையான வலி வாட்டி வதைக்கும் என்பதால், வயதானோரால் நடக்க முடியாது. அவர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம். வயது மூப்பு காரணமாக மூட்டு வலி பிரச்சனை என்பது பரவலாக இருக்கக்கூடிய ஒன்று. இந்த பிரச்சனையில் நிவாரணம் பெற விரும்பினால் உணவுமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். நாள்தோறும் பழங்கள் சாப்பிடுவதை அதிகரிக்க வேண்டும். 
 
ஆரஞ்சு 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் ஒன்று ஆரஞ்சு. இதில் பயனுள்ள சத்துகள் அதிகம் இருக்கிறது. இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலி மற்றும் வீக்கம் குறையும். ஆரஞ்சு பழத்தில் நல்ல அளவு வைட்டமின்-சி உள்ளது. இந்த பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை அதிக அளவில் குறைக்கிறது. மூட்டுவலி நோயாளிகள் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும்.


மேலும் படிக்க | மூளைக்கும் மிகுதியான சக்தி தரும் மாதுளையின் நன்மைகள்


தர்பூசணி 


ஆரஞ்சு பழத்துக்கு அடுத்தபடியாக அதிகம் சாப்பிட வேண்டிய பழம் தர்பூசணி. இதை சாப்பிடுவதும் மூட்டு வலிக்கு பலன் தரும். உண்மையில், தர்பூசணியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் கரோட்டினாய்டு பீட்டா-கிரிப்டோசாந்தின் உள்ளது. இது மூட்டுவலி நோயாளிகளுக்கு நல்லது. இது வீக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது. தர்பூசணி குறிப்பாக முடக்கு வாதம் உள்ள நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க | வெள்ளை முடி பிரச்சனையா, இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க


திராட்சை 


திராட்சை பழத்தையும் அன்றாட உணவு டையட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதை சாப்பிடுவதால் பெரிய பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணத்தை கொடுக்க வல்லது. நிபுணர்களின் கூற்றுப்படி, திராட்சை தோல்களில் ரெஸ்வெட்ரோல் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது மூட்டுவலி நோயாளிகளுக்கு பெரும் நன்மையை கொடுக்கும். 


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் கோரிக்கையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)