முதல் முதலாக இயக்கப்படவுள்ள புல்லட் ரயிலுக்கான பெயர் சூட்டுவது மற்றும் ‘மாஸ்கோட்’ வரைவது தொடர்பான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து, குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் வரையில் புல்லட் ரயில் இயக்குவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், புல்லட் ரயிலுக்கான பெயர் வைப்பது மற்றும் அதை அடையாளப்படுத்தும் வகையிலான கார்டூன் படம் வரைவது ஆகிய போட்டிகளை, தேசிய அதிவிரைவு ரயில் கழகம் நடத்துகிறது.


> இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள் mygov.in என்ற இணையதளம் மூலமாக பங்கேற்க வேண்டும்.
> இதற்கான கடைசி நாள் மார்ச் 25ம் தேதி ஆகும்.
> சரியான பெயரை சூட்டும் வெற்றியாளருக்கு ரூ.50,000 பரிசுத்தொகை வழங்கப்படும்.
> ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கப்படும். அத்துடன் சானிறதழ்கள் கொடுக்கப்படும். 
> சிறந்த கார்டூன் வரைபவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
> ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.10,000 பரிசுத்தொகை வழங்கப்படும். அத்துடன் சானிறதழ்கள் கொடுக்கப்படும்.