விலை உயர்வை தடுக்க மத்திய அரசு சானிட்டைசர்களுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்., 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கைகளுக்கு பயன்படுத்தும் சானிட்டைசர்கள் 200 மில்லி பாட்டிலை, ரூ. 100-க்கு அதிகமாக விற்க வேண்டும். மேலும் அடுக்கு கொண்ட அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மாஸ்க் அதிகபட்சமாக ரூ. 8-க்கும், 3 அடுக்குகளைக் கொண்ட மாஸ்க் அதிகபட்சமாக ரூ. 10-க்கும் விற்பனை செய்ய வேண்டும். 


இந்த விலைக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 30-ம் தேதி வரை இருக்கும். அத்தியாவசியப் பொருட்களான இவற்றின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.