புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே..


இன்றைய நாளுக்கான உங்கள் ராசிபலன் எப்படி உள்ளது? உங்கள் அதிர்ஷ்ட எண், நிறம் என்ன? இங்கே தெரிந்து கொள்ளலாம். 


ராசிபலன் - 30-05-2021


மேஷம்:
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகளும், அதற்கான ஆலோசனைகளும் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.


ரிஷபம்:
சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறை சார்ந்த செயல்பாடுகளில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனை மற்றும் வீடு தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.


Also Read | தமிழ் பஞ்சாங்கம் 30மே, 2021: வைகாசி 16ஆம் நாள்; ஞாயிற்றுக்கிழமை


மிதுனம்:
எதிர்பார்த்த பணிகள் நிறைவடைய காலதாமதம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பாராத வாக்குவாதங்கள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனதில் நிம்மதி ஏற்படும். இளைய சகோதரர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.


கடகம்:
மாணவர்கள் கல்வி தொடர்பான பாடங்களில் திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு சாதகமாக அமையும். எந்தவொரு செயலிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள்.


சிம்மம்:
மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற மனவருத்தங்களை தவிர்க்க இயலும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களிடம் நிதானமான பேச்சுக்களின் மூலம் லாபம் மேம்படும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.


Also Read | தவறாமல் பேரிக்காய் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்


கன்னி:
உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். செயல்களின் தன்மைகளை அறிந்து அதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.


துலாம்:
குடும்ப உறுப்பினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை அறிந்துகொள்வீர்கள். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.


விருச்சகம்:
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான சிந்தனைகளும், முயற்சிகளும் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையுடன் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கோபமான பேச்சுக்களை குறைத்துக்கொண்டு சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். தொழில் தொடர்பான முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும்.


தனுசு:
பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். திறமைக்கேற்ப செல்வாக்கும், பாராட்டுகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.


Also Read | அறுமுகன் முருகனின் பிறந்தநாள் வைகாசி விசாகம்


மகரம்:
நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பங்காளி வகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பணியாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதன் மூலம் லாபம் மேம்படும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


கும்பம்:
சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும்.


மீனம்:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களின்போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றங்களும், ஆதரவுகளும் ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும்.


Also Read | இளவரசர் சித்தார்த்த கெளதமர், புத்தராக ஞானமடைந்த நாள் புத்த பூர்ணிமா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR