முதலீட்டில் பணத்தை பெருக்குவது தான் மக்களின் முக்கிய நோக்கமாக இருக்கும். முதலீடு செய்வதற்கு முன் உங்கள் சந்தையை முழுமையாக ஆய்வு செய்வது முக்கியம். அனைவருக்கு தனது பணத்தை விரைவில் இரட்டிப்பாக்க விருப்பம் என்றாலும், அது குறித்து சரியாக ஆராய்வதில்லை. இதற்கு சரியான முதலீட்டுத் திட்டத்தில் சேர்வது மிகவும் முக்கியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணத்தைச் சேமிப்பதற்கான சிறந்த வழி, குறைவாகச் செலவழித்து அதிகமாகச் சேமிப்பதாகும். இதன் மூலம் நிதி விஷயங்களில் சமநிலையை அடைய முடியும். உங்களின் மற்ற நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லது ஓய்வூதியத்திற்காக, எவ்வளவு விரைவில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக பலன்கள் இருக்கும். இதற்கு நீங்கள் முதலீட்டு விதிகளை புரிந்து கொள்ள வேண்டும்.


முதலீட்டு விதி 72 உங்கள் பணம் 7 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று கூறுகிறது. இதேபோல், முதலீட்டின் விதி 144 உங்கள் பணம் எவ்வளவு காலத்தில் நான்கு மடங்கு இருக்கும் என்று கூறுகிறது.


மேலும் படிக்க | Amway India மோசடி; ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்


கூட்டு வட்டியில் இருந்து லாபம்


பணம் சம்பாதிப்பதற்கு ஒரு இலக்கை வைத்திருப்பது மிகவும் முக்கியம். இலக்கு இல்லாமல் சேமிக்க முடியாது. சிலருக்கு வீடு வாங்க வேண்டும், சிலருக்கு கார் தேவை, சிலர் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துட்டம் பணம் சேமிப்பார்கள். பெரும்பாலானவர்கள், தங்கள் தேவை மற்றும் சேமிக்கும் திறனுக்கு ஏற்ப சேமித்து வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதில் கூட்டு வட்டியின் மூலம் பணத்தை விரைவில் பெருக்கலாம். கூட்டு வட்டி காரணமாக உங்கள் முதலீட்டு பணத்தில், நல்ல லாபத்தைக் காணலாம்.


மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ 


விதி 72 பற்றி கூறுகையில், நீங்கள் ரூ.200 முதலீடு செய்திருந்தால், ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி கிடைக்கும். இந்த முதலீடு இரட்டிப்பாக்க 72/10=7.2 ஆண்டுகள் ஆகும். ஒரு வருடத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், அது குறைந்தது 7 ஆண்டுகளில் ரூ.2 லட்சமாக மாறும்.


ரூபாய் எப்படி நான்கு மடங்காகும்?


முதலீட்டின் விதி 144 இன் படி, நீங்கள் பணத்தை அதிகரிக்க விரும்பினால், உங்கள் முதலீட்டிற்கு ஆண்டுதோறும் 10 சதவீத வட்டி கிடைத்தால், உங்கள் பணம் 14 ஆண்டுகளில் 144/10 = 4 மடங்கு ஆகும்.


இந்த விதிகளை மனதில் வைத்துக் கொண்டு முதலீடு செய்தால், உங்கள் பணத்தை விரைவில் நான்கு மடங்காக பெருக்க முடியும். 


மேலும் படிக்க | SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR