இராணுவ ஆள் சேர்க்கும் தலைமை செயலகம், சென்னையின் கீழ் இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி நடத்தும், இராணுவ ஆள் சேர்ப்பு முகாமானது ஏப்ரல் 10-ம் தேதி முதல் முதல் ஏப்ரல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இராணுவ ஆள் சேர்க்கும் முகாமில் 14 மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள வேண்டும். அந்த மாவட்டங்கள் பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரயில் உள்ள காரைக்கால் ஆகும்.


ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்க வேண்டும். பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி சீட்டு (Admit Card) மார்ச் 29-ம் தேதி வழங்கப்படும்.


இந்த அனுமதி சீட்டை கட்டாயமாக ஆள் சேர்ப்பு முகாமுக்கு கொண்ட செல்ல வேண்டும்.


உங்கள் விண்ணப்பங்களை www.joinindianarmy.nic.in என்று இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 


உங்களுக்கான தேர்வு, தகுதி, மருத்துவ பரிசோதனை மற்றும் பல தகவல்களை தெரிந்துக்கொள்ள www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


விண்ணப்பம்:- கிளிக்