Healthy Breakfast Foods: பலருக்கும் காலையில் ஏதாவது வேலை செய்யும் போது தூக்கம் மற்றும் சோம்பேறித்தம் இருக்கும். ஒருசிலர் மீண்டும் தூங்க சென்றுவிடுகின்றனர், சிலர் உட்கார்ந்த இடத்தில் இருந்து வேலை செய்ய விரும்புகின்றனர். மேலும் தூக்கத்தை சமாளிக்க பலரும் காலையில் டீ அல்லது காபி குடிக்கின்றனர். ஆனால் இவற்றில் அதிக அளவு காபின் உள்ளதால் இரவில் தூக்கமின்மை மற்றும் செரிமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை சரி செய்ய காலை உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நம்மில் பலரும் மதிய உணவை மிகவும் தாமதமாக சாப்பிடுகிறோம். எனவே காலை உணவை தவிர்க்காமல் அதிக ஆற்றல் தரும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உடனடியாக வெள்ளை முடியை கருப்பாக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்


காலை உணவு


இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லை என்றால் அடுத்த நாள் முழுவதும் சோம்பேறித்தனம் மற்றும் தூக்கம் இருந்து கொண்டே இருக்கும். காலை உணவை தவிர்ப்பதும் இதற்கு முக்கிய காரணம். அதே சமயம் காலையில் அதிகமாக சாப்பிட்டாலும் இந்த பிரச்சனைகள் இருக்கும். 7 மணி நேரம் நல்ல தூக்கம் வேண்டும் என்பதை போல, காலையில் நல்ல உணவுகளை எடுத்து கொள்வதும் முக்கியம். அவை நாள் முழுக்க உடலுக்கு போதுமான ஆற்றலை தருகிறது. எப்போதும் காலை உணவில் ஊட்டச்சத்து நிறைந்த அதே சமயம் அதிக கனமில்லாத உணவை சாப்பிடுவது நல்லது. காலையில் நேரத்தில் ஊறவைத்த பாதாம், வால்நட்ஸ், ஓட்ஸ், சியா விதைகள், வாழைப்பழம், முட்டை, பால் போன்றவற்றைச் சாப்பிடலாம். 


மதிய உணவு 


பலருக்கும் மதியம் சாப்பிட்ட பிறகு நல்ல தூக்கம் வரும். கனமான உணவுகளை சாப்பிடுவது இதற்கு காரணம் ஆகும். எனவே மதியம் தூக்கத்தை தவிர்க்க சாப்பிட்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. இதனால் உணவு நன்கு ஜீரணமாகிறது மற்றும் தூக்கம், சோம்பேறித்தனம் உடலை விட்டு விலகும். 


ஸ்நாக்ஸ்


மதிய உணவில் காய்கறிகளுக்கு பதிலாக சிப்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால் உடனே அவற்றை தவிர்ப்பது நல்லது. இவை உடலுக்கு தூக்கம் மற்றும் சோம்பலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் அதிக தீங்கு விளைவிக்கும். காய்கறிகள் மற்றும் கீரை போன்ற உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. மேலும் ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.இவை உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டையும் பூர்த்தி செய்கிறது.


நீரேற்றம்


பொதுவாக உடலை நீரேற்றமாக வைத்து இருப்பது அவசியமான ஒன்று. உடல் சோர்வு மற்றும் தூக்கமின்மைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்துவது போல, தண்ணீர் குடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். வெறும் தண்ணீருக்கு பதிலாக எலுமிச்சை சேர்த்தும் குடிக்கலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | முகத்திற்கு பளபள பொலிவு கிடைக்க தயிரை இப்படி பயன்படுத்துங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ