அனைவருக்குமே நம் வாழ்வு எப்படி இருப்பதை விட இன்னும் ஒரு படி மேலே சென்றாள் நன்றாக இருக்கும் என தோன்றும். ஆனால் அதற்கான முயற்சிகளை எடுப்பதோ வெகு சிலர் மட்டுமே. அப்படி நாமும் வாழ்வில் மேம்பட, வெற்றி பெற சில தினசரி பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அவை என்னன்னு தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடற்பயிற்சி:


தினசரி நாம் உடற்பயிற்சி செய்வது நம் உடலை மட்டுமல்ல மனதையும் மேம்படுத்த உதவும். தினமும் காலையில் எழுந்து ஏதேனும் உடற்பயிற்சி செய்பவர்கள் அதனால் முழுவதும் மன அழுத்தம் குறைந்தும் நல்ல மனநிலையிலும் காணப்படுபவர். உடற்பயிற்சி  செய்வதால் மகிழ்ச்சி ஹார்மோன்களும் வெளியேறும். இதை தினசரி செய்து வர நம் வாழ்வும் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படும். 


தண்ணீர் அவசியம்:


நாம் எந்த அளவிற்கு தண்ணீர் குடிக்கிறோம் என்பதே பொருத்தும் நமது வாழ்வு மேம்படும். உதாரணத்திற்கு நாம் ஒரு நாளில் சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றால் தலைவலி வருவது போலவும் உடல் சோர்வாக இருப்பது போலவும் உணருவோம். உடலில் நீர் சுத்து இல்லை என்றால் ஆற்றலும் குறைவாகவே இருக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது நம் உடலில் இருக்கும் உறுப்புகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள உதவும். 


பழங்கள்: 


ஹெல்தியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது தற்போது அனைவரது விருப்பத்திற்கு தீர்வாக இருக்கிறது. அந்த வகையில், தினமும் மூன்று வேலையும் ஏதேனும் ஒரு பழத்தை நாம் ஹெல்தி ஸ்னாக்ஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம். இது நம் உடலில் தேவையான வைட்டமின் மற்றும் புரதச்சத்துக்களையும் அதிகரிக்க செய்யும். இதனால் நோய்களை எதிர்த்து போராடும் தன்மையும் நம் உடலில் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு, உடல் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழலாம். 


மேலும் படிக்க | 100 வயதை கடந்து வாழ ஜப்பானியர்கள் செய்யும் 6 விஷயங்கள்! என்னென்ன தெரியுமா?


தியானம்: 


ஐந்து நிமிடம் தினமும் தியானம் செய்தல் நம் மனநிலையை பன்மடங்காக உயர்த்தும். 5 நிமிடம் என்பது கேட்பதற்கு குறைவான நேரமாக இருக்கலாம் ஆனால் இது முழு நாளை எதிர்கொள்வதற்கான தேவையான மன தைரியத்தை நமக்கு அளிக்கிறது. இந்த ஐந்து நிமிடங்களில் நாம் எதைப் பற்றியும் அதிகமாக யோசிக்காமல், அந்த நாள் நன்றாக இருக்க வேண்டும் என்று சிந்தனையுடன் நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நினைவுக்கு வந்து நன்றி உணர்வு கொள்ள வேண்டும். 


தூக்கம்: 


ஒரு மனிதனின் மனநிலை அவர்கள் எத்தனை மணி நேரம் தூங்குகின்றனர் என்பதை பொறுத்தும் அமையும். குறைவான நேரம் தூங்குபவர்கள் எப்போதும் பிறரிடம் கோபம் கொள்பவராகவும், மகிழ்ச்சியற்ற நபராகவும் இருப்பர். ஆனால், ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குபவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதோடு மட்டுமின்றி பிறருக்கும் தொல்லை கொடுக்காமல் இருப்பர். 


புத்தகம் படித்தல்: 


பலருக்கு புத்தகம் எடுத்தாலும் உறக்கம் வந்துவிடும். ஆனால் இந்த பழக்கத்தை மேம்படுத்திக் கொள்வதால் மனநிலை மாற்றம் ஏற்படுவது மட்டுமின்றி, தெரியாத விஷயங்கள் பலவற்றையும் கூட தெரிந்து கொள்ள இயலும். கதை புத்தகங்கள் படிப்பதாக இருந்தால் கூட கற்பனைத் திறனும் வளரும். 


மேலும் படிக்க | மிருகங்களிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஹெல்தியான பழக்கங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ